பெண்மையை போற்றுவோம்

  • 16

அன்பான வரிகளைக் கொண்டு
மென்மையாக பெண்மையை போற்றுவோம்
உதிரம் திறந்து பெற்றெடுத்த பிள்ளை
உலகம் அறிந்ததில் தவறில்லை
உண்மையில் உயிரினை இருமுறை
துறப்பதே பெண்மை
இதுதான் உலகம் மறைத்த உண்மை

கண் திறந்து பார்ப்பதை விட
உள்ளம் திறந்து பார் மனிதா
பெண்மை என்ற ஒன்றை பெருமையாக
வைக்காத உலகில்
காமம் கொண்டே கண்பார்க்கின்றதே
காரணம் என்ன
கண்ணியம் என்ற கடமை தவறியதுதான்

சிலர் செய்யும் சில்லரை வேலைகளுக்கு
பல பெண்கள் பாலியல் பலாத்காரம்
தேவை தீராத உலகமடா இது
தேடித் தேய்ந்தே மாண்டிடுவாய் மனிதா !

மனதின் மர்மம் மறைந்திருக்கும்
எண்ணம்தான்
எண்ணம் எழிலானால்
எல்லாம் வளமாகும்
பெண்மையை போற்றிடுங்கள்
பேரிற்கு தூற்றாதீர்கள்
தூசு படிந்த உலகிலே தூய்மையான
தாய்மை வரம் பெற்றவர்கள் அவர்கள்

கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை-08


 

அன்பான வரிகளைக் கொண்டு மென்மையாக பெண்மையை போற்றுவோம் உதிரம் திறந்து பெற்றெடுத்த பிள்ளை உலகம் அறிந்ததில் தவறில்லை உண்மையில் உயிரினை இருமுறை துறப்பதே பெண்மை இதுதான் உலகம் மறைத்த உண்மை கண் திறந்து பார்ப்பதை…

அன்பான வரிகளைக் கொண்டு மென்மையாக பெண்மையை போற்றுவோம் உதிரம் திறந்து பெற்றெடுத்த பிள்ளை உலகம் அறிந்ததில் தவறில்லை உண்மையில் உயிரினை இருமுறை துறப்பதே பெண்மை இதுதான் உலகம் மறைத்த உண்மை கண் திறந்து பார்ப்பதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *