நீங்கள் பதில் தந்து போனால் நலமே!

  • 6

நீங்களெல்லாம் வியக்கும்படி
நானிங்கு எதுவிதமான
அதிசயங்களும் உங்களுக்கு
முன்னால் நிகழ்த்தவில்லை
மாறாக இங்கு
யாருமில்லா அநாதையாய்க்
கிடந்த ஒரு
உயிருக்கு அடைக்கலம்
கொடுத்திருக்கிறேன் அவ்வளவுதான்!

அநாதையாய்த்
தவித்து நின்ற
அந்த ஜீவன்
வறுமையின் பிடியில்
ஊமையாய்த்துடித்தது ஒரு
கவளம் உணவுக்காய்!

அந்த ஜீவனின்
தவிப்பே இங்கு
மொழி பெயர்க்க
முடியாத உணர்வுகள்!

இருந்தார்கள் இங்கு
இந்த அநாதைக்கும்
உறவுகள் இருந்தும்
தூக்கி வீசப்பட்டிருந்தான்
ஒருவருமில்லா நாதியற்று
இத்தெருவில்!

ஒரு பிடி
உணவுக்காய் கரமேந்தி
நின்ற இவனுக்கு
நீங்கள் பசியாற
வைத்திருந்தால் வஞ்சகம்
சூழ்ந்த இந்த
மானிடர் நடுவில்
துவண்டிருக்கமாட்டான்
இதுவரை இவன்!

நீங்கள் வீணாய்
எறிந்து விட்டுப்
போகும் உணவுகளை
சேமித்துப்பாருங்கள் அவை
எங்கேயாவது சோர்விழந்து
தவிக்கும் அநாதை
ஜீவன்களுக்கு மறு
வாழ்வு வழங்கக்கூடும்!

உண்மையைச் சொல்வதாயின்
நீங்களும் இங்கு
பிச்சைக் காரர்களாய்த்தான்
சாப்புடுகின்றீர்கள் என்றால்
அது மிகையாகாது!

விவசாயிகளை ஏமாற்றி
அரைவிலைக்கு வாங்கி
ஆடம்பரமாய் உண்ணுகிறீர்கள்
நீங்கள் அதிலிருந்து
மனமின்றி வீசிவிட்டுப்
போகும் உணவுகளை
நாங்கள் உன்னுகின்றோம்
தெருவோரங்களில்!

இதில் நாங்கள்
தின்பது பிச்சையாயின்
உங்கள் உணவினை
என்னவென்று கூறுவது!

பதில் சொல்லுங்கள்
உங்கள் மதிப்பும்
மரியாதையும்
காற்றில் போய்விடாது
ஆனதால் பதில்
கூறிவிடடுப்போங்கள்!

பொத்துவில் அஜ்மல்கான்

நீங்களெல்லாம் வியக்கும்படி நானிங்கு எதுவிதமான அதிசயங்களும் உங்களுக்கு முன்னால் நிகழ்த்தவில்லை மாறாக இங்கு யாருமில்லா அநாதையாய்க் கிடந்த ஒரு உயிருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறேன் அவ்வளவுதான்! அநாதையாய்த் தவித்து நின்ற அந்த ஜீவன் வறுமையின் பிடியில்…

நீங்களெல்லாம் வியக்கும்படி நானிங்கு எதுவிதமான அதிசயங்களும் உங்களுக்கு முன்னால் நிகழ்த்தவில்லை மாறாக இங்கு யாருமில்லா அநாதையாய்க் கிடந்த ஒரு உயிருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறேன் அவ்வளவுதான்! அநாதையாய்த் தவித்து நின்ற அந்த ஜீவன் வறுமையின் பிடியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *