நோன்பின் மாண்பு

ரமழான் என் தேசம் வந்து சென்றது ரய்யான் சுவனவாசலின் முகவரி தந்து சென்றது நோன்பிருந்து பக்குவமாய்க் கழித்தோம் முப்பது நாட்கள் மாண்பறிந்து இறைவன் கூலி தருவான் – ஆஹா அது நம் வாழ்வின் அற்புத நாட்கள். பட்டினி இருப்பதிலும் கிடைத்திடுமே மனமகிழ்ச்சி – இது படைத்தோனின் திருப்தி தேடும் ஓர் அற்புத நிகழ்ச்சி. ஆறுவயதுப் பாலகரும் நோன்பிருக்கும் காட்சி பேருவகைப் பெருவெள்ளம் அல்லாஹ் அவனின் மாட்சி அதிகாலைப் பொழுதெழுந்து ஸஹர் செய்யும் நேரம் தஹஜ்ஜுத்தில் குறைத்ததிடுமே நம் […]

Read More

தாய் வீடு

தட்டு தடுமாறி நடந்து தவழ்ந்து விழுந்து எழுந்த பயிற்சியறை என் தாய் வீடு உல்லாசமாய் சுற்றி திரிந்து விரும்பியதை எல்லாம் விரும்பிய நேரம் உண்ணும் உணவகம் என் தாய் வீடு சுதந்திரமாக நடமாடி வேண்டியதை எல்லாம் கேட்டு உரிமையுடன் உத்தரவிடும் ஆட்சிபீடம் என் தாய் வீடு செல்லச் சண்டைகளோடும் வம்பு சண்டைகளோடும் சகோதரங்களோடு கூடி கும்மாளமடிக்கும் மைதானம் என் தாய் வீடு போட்டியின்றி பொறாமையின்றி சீண்டலும் சிரிப்பும் அன்பும் அக்கறையும் நிறைந்த பூஞ்சோலை என் தாய் வீடு […]

Read More

தாய் நாடு தத்தளிக்கின்றது

வளம் நிறைந்த தாய் நாடே வங்க கடலில் இலக்கின்றி சிக்கிய கப்பலாய் தத்தளிக்கின்றாய் -இன்று இன அரசியலில் ஈர்க்கப்பட்டு சிந்திக்காமல் செய்த செயலால் உன் தலையேழுத்தே மாறிவிட்டது தாய் நாடே விண் முட்டும் விலை வாசி விக்கித்து நிற்கும் பொதுமக்கள் பசி மறந்து தூக்கம் தொலைத்து கால் கடுக்க இரவு பகல் பாராமல் வீதி எங்கும் நீண்டு செல்கிறது பெற்றோல் டீசலுக்கான மக்கள் வரிசை வயது வித்தியாசம் இன்றி இன மத பேதமின்றி சொந்த வேலைகளையும் சுக […]

Read More

எழுதுகிறேன் ஒரு கடிதம்

அன்புச் சகோதரியே! இஸ்லாமியச் சோலையில் பிறந்து, ஈமானிய சுகந்தம் சுமந்த, என்அன்புச் சகோதரியே! அறிவில்ஆகச்சிறந்த அரிவையரை ஈன்ற மார்க்கம் இஸ்லாம், நாணத்தில் சாலச்சிறந்த நங்கைகளால் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம், போர்முனையிலும் வீரமங்கைகளால் ஒளிர்ந்த மார்க்கம் இஸ்லாம். அவர்களின் வெட்கம் விலைபோகவில்லை, அவர்களது ஆடைகள் கோலம் மாறியதில்லை, கேளிக்கைகளை அவர்கள் நாடியதில்லை. நீ! அன்னை பாத்திமாவின் வாரிசு. உனக்கென விரிந்திருப்பது தனிவழி அதைப் பேணி நடப்பதே மாண்பாகும். இஸ்லாத்தின் அடிச்சுவடுகளில் இருந்து உன் பாதங்கள் விலகிடும் கணமெல்லாம் நீ […]

Read More

பெண் பார்க்கும் படலம்

சொப்பனமாய் செதுக்கி மஞ்சம் பூசி கோட்டழகுடன் கண்வெட்டும் அழகோவியமாய் வலம் வந்த நங்கை ஆசைக்கனவுகளை தன்னுள்ளே முடிச்சிட்டு கூடிநின்றோர் வாழ்த்தும் களிப்புடன் முகிழ்த்தெழுந்த வந்தனங்களுடன் வேட்கையில் பல சொந்தங்கள் சூழ களைந்த தேனீக்களாய் சிதறும் எண்ணங்கள் தாங்கியும் பவ்வியமாய் புன்முகங்காட்டும் பெற்றவர்கள் கொஞ்சும் மொழி பேசி தன் உறவாய் உரிமை எடுத்தவர்களுடன் – அவள் மனக்கிடங்கில் மாளிகையின் கதவுகள் தானாகத்திறந்து கொள்ளும் கங்காணிகள் போல் தொடுக்கும் கணைகளை மனதில் வாங்கியவள் வெறும் சதைப்பிண்டமாய் கண்டவர்கள் தன்னில் இருந்து […]

Read More

சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

IFE நிறுவனத்தினால் நாடு பூராகவுள்ள க.பொ.த சாதரண தர மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் முகமாக நடாத்தப்பட்டு வரும் இலவச கருத்தரங்கு தொடரிலே இரண்டாவது கருத்தரங்கு 2022.04.16 அன்று நிகவெரட்டிய கல்வி வலய அபுக்காகம முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நடை பெற்றது. இக் கருத்தரங்கின் வளவாளராக IFE நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் H.M SHAFNAZ (Cvili Engineering- ®) அவர்கள் கலந்து கொண்டார். அத்தோடு இக்கருத்தரங்கில் மேற்பார்வைக்காகவும் மாணவர் வாழிகாட்டல் அமர்வுக்காகவும் IFE நிறுவனத்தின் கௌரவ பணிப்பாளர் A.R.M […]

Read More

எண்ணெய் இன்றி

வீட்டுக்கு போ என ஊர்மக்கள் கூச்சலிட்டால் வீடு செல்ல முடியுமா எண்ணெய் இன்றி மனைவியோ வீட்டுக்கு வர வேண்டாம் என்கிறாள் எண்ணெய் இன்றி மகனோ அமெரிக்காவில் நான் வரிசையில் எண்ணெய் இன்றி எண்ணெய் உதவுவது போல் அண்ணன் தம்பி உதவாதென தனியாக வந்தேன் தவிக்கையில் எண்ணெய் இன்றி Ibnuasad

Read More

நீர்

இயற்கை எனும் பச்சை கம்பளத்தில் மூன்றில் இரண்டாய் தனக்கென்று இடம்பதித்து உய்யாரமாய் ஊடுறுவி தாவரங்கள் தழைத்து தாகம் தீர்க்க உயிர்கள் நிலைத்திருக்க விண்ணவனின் அருள் விந்தையாய் வந்துதிக்க வீணடிக்காதீர் நீரை வீழ்வீர் நீரே! அஸ்மா மஸாஹிம் பாணந்துறை

Read More

கரண்ட் இல்லை

எனக்கு ஏன் இப்படி வியர்த்துக் கொட்டுகிறது. எங்கும் இருள் சூழ்ந்திருக்கின்றது. ஒவ்வோர் அடியாக மெதுவாக எடுத்து வைக்கிறேன். இங்கே எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திக்கு என்னவானது… முழுதும் உருகி விட்டதா…? “பேதமை என்பது யாதெனில் ஏதம் கொண்டு ஊதியம் கைவிடல்” மகள் பாடம் செய்யும் குரல் மெதுவாய் ஒலிக்கிறது. இன்னும் சிறிது முன்னோக்கி நகர்கிறேன். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மகள் படித்துக்கொண்டிருக்கிறாள். “மகள்… மகள்….” என்று அழைக்கிறேன். என் குரல் வெளிவருவதில்லை. எனக்கு என்ன ஆகிவிட்டது என தடுமாறியவளாக மீண்டும், […]

Read More

ஒரு ரூபா நாணயங்களை கொடுத்து பைக் வாங்கிய இளைஞன்

பட்டதாரி இளைஞரான இவர் மக்களிடம் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டார். இவருக்கு நீண்ட நாட்களாக ஒரு பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி என்பவரே இவ்வாறு பைக் வாங்கியுள்ளார். ரூ.2 இலட்சத்து 60 ஆயிரம், ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே கொடுத்து பைக் வாங்க திட்டமிட்டார். இதற்காகச் சில்லறை நாணயங்களை முதலில் பூபதி சேமித்து வந்தார். ரூ.10 ஆயிரம் வரை சில்லறை நாணயங்களை […]

Read More

பசியும் பட்டினியும்

வேலை தேடிப் போக முடியல்லயே… என் குடிசையில் நெடுநாள் அடுப்பு எரியல்லயே… எரியாத அடுப்பு கண்டு என் நெஞ்சு எரிகிறதே அழுகின்ற பிள்ளைக்கு ஆகாரம் தேடி யலைகிறதே… பட்டினி கிடந்த வயிறெல்லாம் பசியில் கொதிக்குதே தட்டினில் உணவில்லா நிலை கண்டு கண்ணீரும் வழியுதே… பிள்ளை பசி தீர்க்க முடியா துன்பம் தந்தையொருவரின் உயிரைப் பறித்ததே… ஏழ்மையின் வாசலில் வெறுமை மிகக் கொடுமையானதே… தண்ணீர்க் குவளையில் கண்ணீர் துளிகள் சேருதே… மிடிமையின் பிடியில் உடைமை பசியென்றானதே… பசியும் பட்டினியும் […]

Read More

புலமை பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதனை படைத்த ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலம் – 2021 (2022)

2021 (2022) ஆம் ஆண்டிற்கான வருடாந்த ஜந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மத்தி வலயத்துற்குற்பட்ட ஏறாவூர் கோட்டத்தில் ஆரம்ப பாடசாலையான மட் /மம/ டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மாணவி நெளபி பாத்திமா திக்ரா 190 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்து தந்துள்ளார் அம்மாணவிக்கும் பொற்றோருக்கும், கல்வியை ஊட்டிய ஆசிரியர்களுக்கும், அதிபருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேம் . இப்பாடசாலை ஏறாவூர் கோட்டத்தில் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப […]

Read More

சர்வதேச மகளிர் தினத்தில் கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி

சர்வதேச மகளிர் தினம் கடந்த மார்ச் 08ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் ஏற்பாடு செய்யப்படும் விழாக்கள், வைபவங்களில் பெண்களின் உரிமைகள், சமூக ரீதியில் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட அனேக விடயங்கள் அதிகமாக பேசப்படும். அவ்வாறு மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படும் சந்தர்ப்பத்தில் இளம் பருவத்தில் காலடி எடுத்து வைத்திருந்த பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, உடுவர தோட்டத்தின் கீழ் பிரிவில் வசிக்கும் இளம் யுவதி ஒருவர் கோடரியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறு படுகொலை […]

Read More

மஜ்மாநகரில் 291 ​பௌத்த சமயத்தவர்கள் உட்பட 3,634 நபர்களின் உடல்கள் நல்லடக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் காகிதநகர் 210பி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கிராமமே சூடுபத்தினசேனை – மஜ்மா நகராகும். கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இக்கிராமத்தில் வாழும் மக்கள் விவசாயம், விலங்கு வேளாண்மை, மீன்பிடி, மேட்டு நிலப்பயிர்ச் செய்கை போன்ற தொழில் நடவடிக்கைகளினூடாக தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக எமது நாட்டிலும் ஏராளமான உயிர்களை நாம் இழந்துள்ளோம். கொவிட் 19 வைரஸ் தொற்று […]

Read More

யுத்த சத்தம்

உக்ரைன் மண்மீது அக்கிரமம் நடக்கிறது வக்கிரம் நிறைந்த தலைமைகளால் தீக்கிரையாகின்றது உயிரெல்லாம் குருதிப் பெருவெள்ளம் அருந்திப் பார்த்திட ஆசையோ வருந்தியழுவீர் ஒரு நாள் திருந்திட முனைவீரே அதற்கு முன்னால் அமைதி குலைப்பதில் அப்படியென்ன திருப்தி சமாதிகள் பெருக்கி மகிழ்வதற்கா உயர் பதவி புட்டினின் நோக்கமெல்லாம் பட்டினிச் சாவா விட்டினிப் போய்விடு பொல்லாத போரே சுடுகாட்டினைப் போல் மாற்றாதே ஒரு நாட்டை உயிரெல்லாம் மடிந்து உருக்குலைந்து சிதைந்து குண்டடிபட்டு நிம்மதி கெட்டு கட்டிடமெல்லாம் இடிபட்டுடைந்து அழிந்து போக விடலாமோ […]

Read More

வரலாறு புரண்ட கதை – நூல் விமர்சனம்

இன்றைய நூல்: வரலாறு புரண்ட கதை நூலாசிரியர்: அஷ்ஷெய்க் அஸ்கர் அரூஸ் (நளீமி), விரிவுரையாளர் ஜாமிஆ நளீமியா கலாபீடம் பேருவளை முதல் தலைப்பு: சிரமப் பணி பக்கம்: 11 முதல் 27 வரை “வரலாறு புரண்ட கதை” என்ற இந்த நூலின் பெயரை பார்க்கும், கேட்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நூலின் உள்ளடக்கத்தை அறிய ஆவல் ஏற்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. தழுவல் நூலாக இருக்கும் இந்த நூலிற்கு ஜாமிஆ நளீமியா கலாபீட உதவிப் பணிப்பாளர் […]

Read More

காற்பந்தால் கால்பதித்த கலைபீட மாணவன் மொஹமட் ஜுனைட் ரொஷான் அஹமட்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் துறை இறுதிவருட மாணவனான மொஹமட் ஜுனைட் ரொஷான் அகமட் மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்டவர். பாடசாலைக் கல்வியை மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலையில் பயின்ற இவருக்கு சிறுவயதிலிருந்தே விளையாட்டுத்துறை என்றால் அலாதிப்பிரியம் . ஆரம்ப பாடசாலை நாட்களில் ஓட்டம், தடைதாண்டல் போட்டி, நீளம் பாய்தல் என மெய்வல்லுனர் போட்டிகளில் விஷேட திறமை காட்டினார். மேலும் முதன் முறையாக 2013ம் ஆண்டு ரொஷானை தலைவராய் கொண்ட பாடசாலை கரப்பந்தாட்ட அணி மாவட்ட மட்டத்தில் முதலாம் […]

Read More

பொது நூலகர்பணியாளர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்கலைக்கழக நூலகம் சமூக நலத் திட்டத்தின் கீழ் (Community outreach programme) பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட நூலகர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தற்கால நவீன சவால்களை எதிர்நோக்கக்கூடிய வினைத்திறன்மிக்க சேவைகளை வழங்கவேண்டுமென்ற நோக்கில் ஒரு நாள் வலுவூட்டல் நிகழ்ச்சி ஒன்றினை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) றமீஸ் அபூபக்கர் அவர்களின் பணிப்புரையின் பேரில் பல்கலைக்கழக நூலகர் எம் எம் றிபாயுடீன் […]

Read More

உலமா சபையின் கருத்துக்களுக்கு முஸ்லிம்கள் சாதகமாக பதிலளிக்க வேண்டும்

Mass L. Usuf அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (ACJU) என்பது, இன்னும் இரண்டு வருடங்களில் அது நூறு வருடங்களை பூர்த்தி செய்யவுள்ள 1924 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட மிகப் பழமையானதொரு முஸ்லிம் மத  அமைப்பாகும்  மேலும் அது 2000 ஆண்டு 51 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. மேலும்  சுமார் 8,000 இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ACJU இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் உணவு மற்றும் மனித நுகர்வுக்கான பிற […]

Read More

பெண்மையைப் போற்றுவோம்

உலகிலே மான்பு மிக்க மனித இனம் பெண் தான் மாற்றும் மிக்க பெண்கள். மாறும் இந்த உலகிலே இதுவரை மாறாத ஒரே ஒரு இறைவனின் படைப்பு பெண் மாறாக் கல்நெஞ்சங்களையும் மாற்றத்தக்க மனதாக மாற்றுவது பெண் மாற்றுமையின் உச்சம் பெண் மாசில்லா இறைப் பிரதிநிதி பெண் உயிரை உலகிற்கு தரிவிக்கும் உத்தம படைப்பு பெண் கருவை சிசுவாய்ப் பிரசிப்பவள் பெண். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே போராடி இறைவனின் படைப்பான – தன் குழந்தையை உலகைக் காணச் செய்வாள் […]

Read More