நல்ல மனிதர்களை சம்பாதிப்போம்
- by admin
- 19
உலக மோகம் கொண்ட மனிதன் அதை முழுமையாக அனுபவிக்க தினந்தோறும் பல மனிதர்களை பகைத்து கொண்டுள்ளான் ஆனால் அவனின் இறுதி முடிவோ. அவன் சேமித்து வைத்த சொத்துக்கள் யார் யாருக்கோ சொந்தம் ஆகின்றது.
அவன் சம்பாதித்த சொத்துக்களில் அவனின் இறுதி பயணத் தொழுகையில் கலந்து கொண்டு அவனுக்காக பிரார்த்னை செய்யும் ஷிர்க் செய்யாத 40 துக்கு மேற்பட்ட மனித உள்ளங்கள் தான் பொறுமதி மிக்கது.
ஏன் தெரியுமா?
அவர்களின் பிரார்த்னை அவனின் பாவங்களை அழித்து நரகத்தை விட்டு அவனை காத்து அவனுக்கான நிரந்தர வீட்டை பெற்றுக் கொடுக்கும்.
“ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் : 1730)
சிந்திக்க மறந்த பகுதி
தினந்தோறும் தனது வங்கிக் கணக்கின் மீதியை சரி பார்க்கும் மனிதன் தான் மரணித்தால் தனது ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டு தனக்காக பிரார்த்னை செய்ய அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத எத்தனை பேரை நான் சம்பாதித்துள்ளேன் என்பதை சரிபார்க்க தவறி விட்டான்
இன்திகாப் உமரி
உலக மோகம் கொண்ட மனிதன் அதை முழுமையாக அனுபவிக்க தினந்தோறும் பல மனிதர்களை பகைத்து கொண்டுள்ளான் ஆனால் அவனின் இறுதி முடிவோ. அவன் சேமித்து வைத்த சொத்துக்கள் யார் யாருக்கோ சொந்தம் ஆகின்றது. அவன்…
உலக மோகம் கொண்ட மனிதன் அதை முழுமையாக அனுபவிக்க தினந்தோறும் பல மனிதர்களை பகைத்து கொண்டுள்ளான் ஆனால் அவனின் இறுதி முடிவோ. அவன் சேமித்து வைத்த சொத்துக்கள் யார் யாருக்கோ சொந்தம் ஆகின்றது. அவன்…