நீயே என் காதல்
- by admin
- 40
மரணித்த மனதை உயிர்ப்பித்த உனது விழிகள்
ஏன் மீண்டும் என்னை உயிரோடு புதைக்கின்றன
உயிரற்ற உடலாய் எனது காதல் நீயற்றுத் தவிக்கிறது
நீரற்ற மீனாய் என்னை தரையிலிட்டு வேடிக்கை பார்க்கிறாய் நீ
வேதனை செய்யாத உனது விழிகள்
ஏன் சாதனை புரிகிறது என்னிடத்தில்
மௌனம் கொண்டு உன்னை நேசித்ததில் இருந்து
உயிர் உப்புக்காற்றைக்கூட சுவாசம் கொள்கின்றது
உனது மூச்சும் அதில் கலந்திருக்க்கூடும் என்று
நட்சத்திர வானமோ எச்சில் துப்புகிறது
நெஞ்சில் மிதிப்பவள் பாதத்தையே
நெஞ்சில் சுமக்கும் உன் மனதிற்கு
நஞ்சாய் என் இரவுகள் இருக்கின்றதே
என்று தனக்குத்தானே கருப்பொருளாக
என் காதல் இருக்கவே
கண்ணீர்த் துளிகளால்தான் முற்றுப்பெறுகிறது
என் கவிதை வரிகள்
ஐ.எம்.அஸ்கி
கவியிதழ் காதலன்
அட்டாளைச்சேனை -08
மரணித்த மனதை உயிர்ப்பித்த உனது விழிகள் ஏன் மீண்டும் என்னை உயிரோடு புதைக்கின்றன உயிரற்ற உடலாய் எனது காதல் நீயற்றுத் தவிக்கிறது நீரற்ற மீனாய் என்னை தரையிலிட்டு வேடிக்கை பார்க்கிறாய் நீ வேதனை செய்யாத…
மரணித்த மனதை உயிர்ப்பித்த உனது விழிகள் ஏன் மீண்டும் என்னை உயிரோடு புதைக்கின்றன உயிரற்ற உடலாய் எனது காதல் நீயற்றுத் தவிக்கிறது நீரற்ற மீனாய் என்னை தரையிலிட்டு வேடிக்கை பார்க்கிறாய் நீ வேதனை செய்யாத…