வாழ்வு இனிக்க
- by admin
- 19
ஒழுக்கம் நீ
மண்ணறையில் வாழ்ந்தாலும்
மக்கள் மனங்களில் உன்னை
மகிமையுடன் வாழ வைக்கும்.
அழகு என்பது முகத்தோற்றமல்ல
அழுக்குகள் நீக்கப்பட்ட அகம் தான்
உண்மையான அழகு.
மிருகங்களின் சாணத்திலே
புற்களும் பூக்களும் முளைக்கலாம்
அதற்காக சாணமும் பூக்களாகுமா.
செய்தவற்றுக்காக புகழை விரும்பாதே
செய்யாதவற்றுக்காக பாராட்டை எதிர்பாராதே
எத்தனையோ சேவல்கள் தாம் கூவித்தான்
சூரியன் உதிப்பதாக எண்ணிக்கொண்டிருக்கின்றன.
உனக்குச் சொந்தமில்லாததன் மீது
ஆசை கொள்ளாதே
இருக்கும் வசதியுடன் பொறுமையாய் வாழ்
பெருமைக்காக வசதியை மீறி வாழாதே
அது பேராபத்தினுள் உன்னைத் தள்ளிவிடும்
பிறரின் ஆடம்பரம் கண்டு ஆசை கொள்ளாதே.
இங்கு ஆடம்பரத்துக்காக இருந்த வாழ்வையும்
இழந்தோரின் பரிதாப நிலை – மிகக் கொடுமை
நீ விரும்பும் அனைத்தும் உனக்கு
சந்தோஷம் தருவதும் அல்ல.
நீ வெறுக்கும் அனைத்தும்
உனக்கு கவலை தருவதும் அல்ல.
இறை திருப்திக்காக வாழ்
வேம்பும் தேனாகும்
கவலையும் இன்பமாகும்.
பாஹிர் சுபைர்
ஒழுக்கம் நீ மண்ணறையில் வாழ்ந்தாலும் மக்கள் மனங்களில் உன்னை மகிமையுடன் வாழ வைக்கும். அழகு என்பது முகத்தோற்றமல்ல அழுக்குகள் நீக்கப்பட்ட அகம் தான் உண்மையான அழகு. மிருகங்களின் சாணத்திலே புற்களும் பூக்களும் முளைக்கலாம் அதற்காக…
ஒழுக்கம் நீ மண்ணறையில் வாழ்ந்தாலும் மக்கள் மனங்களில் உன்னை மகிமையுடன் வாழ வைக்கும். அழகு என்பது முகத்தோற்றமல்ல அழுக்குகள் நீக்கப்பட்ட அகம் தான் உண்மையான அழகு. மிருகங்களின் சாணத்திலே புற்களும் பூக்களும் முளைக்கலாம் அதற்காக…