Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அதுதான் என் ஓலைவீடு 

அதுதான் என் ஓலைவீடு

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஒன்பதுபேர் வந்துநின்று
ஒவ்வொன்றாய் எண்ணினாலும்
தொகையறிய முடியாத
துளைகளைக் கொண்ட
ஒரு ஓட்டை வீடு
அதுதான் என்னோலை வீடு.

அதிகாலை நேரத்தில்
துயிலெலுந்து தடுமாறும்
சூரியனின் தரிசனம்.
என்வீட்டுக்குள் என்பதே
நான்கூறும் நிதர்சனம்.

அந்திமாலை நேரத்தில்
விண்ணுலகில் தோன்றுகிற
வெண்ணிலவின் ஒருபாதி.
என் ஓட்டையான
வீட்டுக்கூரையை நிரப்ப
இறைவன் தந்த ஒரு மீதி.

என்வீடும் ஒருவகையில்
எனக்குள்ள மாளிகைதான்.
என்வீட்டின் பெறுமையினைக்
கண்டவர்கள் சிறுதொகைதான்.

வீட்டைச் சுற்றி கிடக்கும்
கம்புவேலிகள்.
அந்த வேலிகளிலே படர்க்கும்
வண்ண பூக்களின் செடிகள்.
பூக்களின் இனிமையினை
அணுவணுவாய் அனுபவிக்க
அணிதிரண்டு வருகிறது
பூச்சிகளின் பட்டாளம்.
இயற்கை வரைந்த அந்த
அழகானக் காட்சியைக் கண்டு
என்மனம்தான் போடும்
தினந்தோறும் குற்றாலம்.

திண்ணையில் அமர்ந்தால்
குளிர்கின்றது மேனி.
திடீரென எழுந்தால்
வியர்க்கின்றது யென் மேனி.
கறையானுக்கிரையான
பழங்கால ஜன்னலதை
பட்டென்று திறந்தேன்.
என்னுடல் சூட்டைத் தணிக்க
உடன் உள்ளே வருகிறது
சுகமான தென்றல்.

மூவேளை எனையாலும்
பொல்லாத பசியதனை
ஓடோடத் துறத்த.
மனைவியின் கைப்பட்ட
இரண்டு மூன்று
அரிசிமணிகளை
கஞ்சிதான் சுமந்து வருகிறது.
ஆனாலும் என்ன?
கஞ்சி தண்ணியாக இருந்தாலும்
அன்பான மனைவியின்
முகம் பார்த்துக் குடிக்கையிலே
அதுவும் ஒரு அமிர்தம் தான்.

நிம்மதியைத் தேடி
நித்திரைக்கு நான்சென்றால்
செவ்வாயைத் திறந்து
செல்லமகன் அழுகையிலே.
துயில்கலைந்த மனைவியின்
தாலாட்டுப் பாட்டினிலே.
மகனின் அழுகைக்கு
போடப்பட்டது முத்திரை.
என் கண்களுக்கு
வந்தது நித்திரை.

மனைவியின் கைகளோ
விளக்கை யனைக்க.
விண்தந்த விளக்குகளோ
என்வீட்டில் ஒளிக்க.
வெண்ணிலவு என்கின்ற
விண்தந்த ஒருவிளக்கு
என் முகத்தைப்
பார்த்துக் கொண்டே இருக்க
என்கண்களும் அசந்தது பாரு
அதுதான் என்னோலை வீடு!

Rustha salam

ஒன்பதுபேர் வந்துநின்று ஒவ்வொன்றாய் எண்ணினாலும் தொகையறிய முடியாத துளைகளைக் கொண்ட ஒரு ஓட்டை வீடு அதுதான் என்னோலை வீடு. அதிகாலை நேரத்தில் துயிலெலுந்து தடுமாறும் சூரியனின் தரிசனம். என்வீட்டுக்குள் என்பதே நான்கூறும் நிதர்சனம். அந்திமாலை…

ஒன்பதுபேர் வந்துநின்று ஒவ்வொன்றாய் எண்ணினாலும் தொகையறிய முடியாத துளைகளைக் கொண்ட ஒரு ஓட்டை வீடு அதுதான் என்னோலை வீடு. அதிகாலை நேரத்தில் துயிலெலுந்து தடுமாறும் சூரியனின் தரிசனம். என்வீட்டுக்குள் என்பதே நான்கூறும் நிதர்சனம். அந்திமாலை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *