அன்புடையோனின் அருள்மறை
- by admin
- 9
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
அன்புடையோனின் அருளாலும்
ஆற்றலுடையோனின் சொல்லாலும்
வானவர் வழி வந்துதித்த வான்மறை இது.
வாழும் வழியும் காட்டி
வாழ்வு அதில் கண்ணியமும் ஊட்டி
உண்மை உத்தமர் வழி தந்த
திருமறை இது
பார் வெல்லும் புலவரென்றாலும்
அவர் நா வெல்லும் புலமையுண்டு
அசராத அறிஞனென்றாலும்
அவனறியா அறிவியலும்
அடுக்கடுக்காயுண்டு
அன்புண்டு
பெரும் பண்புண்டு
நாகரீகங்கள் சொல்லிடும்
நல்லிணக்கங்களும் பலவுண்டு
கருவிழி தாண்டி
கருவரை தாண்டி
கரு உருவம் பெற்றிடும்
காலம் வரை
கணக்கிட்டுச் சொல்லிடும்
அத்தியாயும் அழகாயுண்டு (23:14)
அதிசயம் தரும் ஆச்சரியமுண்டு
ஆண்டாண்டானாலும் காத்திடுவோம்
நானே கடவுளெனும்
கறைமனம் கொண்டவனின்
கட்டுடலை காத்திடுவோமெனும்
முன்னறிவிப்பும் முழுதாயுண்டு (10:92)
தரைப்பிரசவம் தாண்டிய
தண்ணீர் பிரசவம்
தாய்க்கும் சேய்க்கும்
தாராள பிரயோசணமெனும்
உண்மைக்கருத்தும் உறுதியாயுண்டு (19:24)
விஞ்ஞானமுண்டு விரல்ரேகை
பற்றியதொரு மெய்ஞானமுண்டு (75:4)
அறிவுடையோர்க்கு அழகாய்
அறிவுரையும் அமுதாயுண்டு
விரிவாய் பல விரிவுரையும்
விரிவடைந்து கொண்டே
செல்லும் வான் பற்றியொரு
வசனமும் வலுவாயுண்டு (51:47)
நீதியுண்டு நிதர்சனமுண்டு
நேர்மையுண்டு
நெறிகள் பலவுமுண்டு
அன்புடையோனின்
அருள்மறையிது
போற்றிடுங்கள்
அதன்வழி பற்றிடுங்கள்
இஷாதா முஹம்மத்
ஏரூர்
23:14. பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப் பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.
10:92. உனக்குப் பின் வருவோருக்கு! நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் தமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.
19:24. “கவலைப்படாதீர். உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்.” என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து (வானவர்) அழைத்தார்.
75:4. அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.
51:47. (நமது) வலிமையால் வானத்தை படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவு படுத்துவோராவோம்.
அன்புடையோனின் அருளாலும் ஆற்றலுடையோனின் சொல்லாலும் வானவர் வழி வந்துதித்த வான்மறை இது. வாழும் வழியும் காட்டி வாழ்வு அதில் கண்ணியமும் ஊட்டி உண்மை உத்தமர் வழி தந்த திருமறை இது பார் வெல்லும் புலவரென்றாலும்…
அன்புடையோனின் அருளாலும் ஆற்றலுடையோனின் சொல்லாலும் வானவர் வழி வந்துதித்த வான்மறை இது. வாழும் வழியும் காட்டி வாழ்வு அதில் கண்ணியமும் ஊட்டி உண்மை உத்தமர் வழி தந்த திருமறை இது பார் வெல்லும் புலவரென்றாலும்…