Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அரசுக்கு வரி செலுத்தத் தவறும் வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை 

அரசுக்கு வரி செலுத்தத் தவறும் வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை

  • 4

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி மூலம் பில்லியன் கணக்கான வருமானத்தை ஈட்டி அரசுக்கு உரிய வரியை செலுத்த தவறும் இறக்குமதி வர்த்தகர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வழிவகைகள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நுகர்வோரிடம் கொள்ளை இலாபம் பெற்று அரசாங்கத்திற்கு வரி செலுத்தத் தவறிய அவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களின் வருமானத்தில் 36% அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெரிய வெங்காய இறக்குமதி மூலம் கடந்த வருடத்தில் மாத்திரம் அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் 8000 கோடி ரூபாவை வருமானமாக பெற்றுக் கொண்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டிய அவர், சகல வரிகளும் நீங்கலாக 92 ரூபாவுக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்து அதனை 700 ரூபாவுக்கு விற்று அவர்கள் நுகர்வோரை சுரண்டிப் பிழைத்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ், சிங்கள புது வருடம் மற்றும் நோன்பு பெருநாள் காலங்களில் பெரும் தொகை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் நிலையில் அதன் மூலம் நுகர்வோரிடமிருந்து கொள்ளை இலாபம் அடிக்க வேண்டாம் என அந்த வர்த்தகர்களைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

வழி வகைகள் தொடர்பான பாராளுமன்ற குழு பாராளுமன்ற குழு அறையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியது. அதன்போதே அக்குழுவின் தலைவரான பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஆண்டு மாத்திரம் பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் 8000 கோடி ரூபா இலாபமடைந்துள்ளார்கள். அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் பெற்றுக்கொண்டுள்ள இலாபத்தில் 36 சதவீதத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கு  உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு நாம் ஆலோசனை வழங்கியுள்ளோம்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மக்களை சுரண்டிப் பிழைக்கும் செயற்பாட்டில் சில வர்த்தகர்கள் ஈடுபடுகிறார்கள்.அத்தியாவசிய பொருட்களின் விலை நியாயமற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடையவில்லை.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் மத்திய வங்கி, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளை பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவுக்கு அழைத்து மேற்படி விவகாரம் தொடர்பில் பேச்சு வார்த்தையை நடத்தினோம்.

அதேபோன்று,  புத்தாண்டு காலத்தில் மக்களை சுரண்டிப் பிழைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதை வர்த்தகர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அவர்களைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

The post அரசுக்கு வரி செலுத்தத் தவறும் வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை appeared first on Thinakaran.

“}]]Read More 

​ 

[[{“value”:” அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி மூலம் பில்லியன் கணக்கான வருமானத்தை ஈட்டி அரசுக்கு உரிய வரியை செலுத்த தவறும் இறக்குமதி வர்த்தகர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வழிவகைகள் தொடர்பான பாராளுமன்ற…

[[{“value”:” அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி மூலம் பில்லியன் கணக்கான வருமானத்தை ஈட்டி அரசுக்கு உரிய வரியை செலுத்த தவறும் இறக்குமதி வர்த்தகர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வழிவகைகள் தொடர்பான பாராளுமன்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *