அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 12
- by admin
- 12
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
“வா….வ்… நம்ம இளவரசி அப்போ இவங்க.. அப்போ நானும் உங்க கூட வருவேன்.” என்று துள்ளினாள் சோஃபி.
“இங்க பாரு சோஃபி… நீ ரொம்ப சின்ன பொண்ணு… உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு… இப்படி எங்க கூட வந்தா பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்… புரிஞ்சிக்க.”
“ஆனா… என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்…”
“அதையும் சொல்லேன் பாக்கலாம்.” என்று நக்கலடித்தான் ரியூகி.
“இந்த ரெண்டு வருஷம் நான் என்ன பண்ணினேன்னு நினைக்கிற…… நம்ம பாரம்பரிய தற்காப்பு கலையை கத்து கிட்டேன்..” என்றாள் பெருமையாக.
“நீ ஏன் அதெல்லாம் கத்துகிட்ட…”
“ஏன் ஏன்… கத்து கிட்டா என்னவாம்… நமக்கு இல்லேன்னா கூட மத்தவங்களுக்கு உதவலாமே…”
“சரியா சொன்னே சோஃபி”
“நீ வாய மூடுடா…”
“அவன் வாயை எதுக்கு அடைக்குறே… பொண்ணுங்க நினைச்சா எதையும் செய்வாங்க… ஆஹ்… நீ விரும்பினாலும் விரும்பல என்றாலும் நான் உன்கூட வரத்தான் போறேன்.” என்றாள் சோஃபி
“எனக்கு இதுல இஷ்டம் இல்ல….”
“உன்னோட இஷ்டம் எல்லாம் யாரு கேட்டா… சரிதான் போடா… நீங்க வாங்க அலைஸ்… நாம என்னோட அறைக்கு போவோம்..” என்று அழைத்து கொண்டு சென்றாள்.
“இந்த பொண்ணுங்கள திருத்தவே முடியாது…. இல்லே” என்று ரியூகி சொன்னதுக்கு,
“அதுதான் விதி என்றால் அதை யாராலும் தடுக்க முடியாது..” என்று தத்துவம் சொல்ல, ரியூகி அறையை சுற்றி பார்த்து,
“இங்க வெச்ச என்னோட வாள் எங்க போச்சு…” கியோன் ஓடிவிட்டான்.
சோஃபியின் அறை…..
“நீ ரொம்ப நல்லா பேசறே சோஃபி…உன் பேச்சில் கள்ளங்கபடம் இல்லை..”
“ரியூகி தங்கச்சி ஆச்சே. சரி உங்க பயணத்தில் அடுத்து எங்க போறீங்க…”
“கோரின் அக்கா கிழக்கு திசையில் இருக்குற எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கிறதா மாஸ்டர் சொன்னாரு நாம அந்த திசையில் தான் பயணிக்க வேண்டும்.” என்றாள் அலைஸ்.
“உங்க அக்காவை கண்டால் உங்களால அடையாளம் காண முடியுமா…”
“தெரியாது.. ஏதோ என்னோட மனசு அவளை கண்டுபிடிச்சிடும் என்னு தோணுது”
“சரி… இருட்டிடுச்சு… காலைல புறப்படலாம் இங்க நீங்க தூங்கிக்கலாம் ரெஸ்ட் எடுங்க நான் கொஞ்சம் காற்று வாங்கி வாரேன் ராத்திரி கொஞ்சம் தென்றலை சுவாசிச்சே ஆகணும்” என்ற சோஃபி. சிரித்து கொண்டே வெளியேறினாள்.
பயணக்களைப்பில் அலைஸ் தூங்கி விட்டாள். சோபி முற்றத்துக்கு வந்து இனிமையான அந்த இரவின் தென்றல் காற்றை அனுபவித்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென யாரோ அவளை கண்காணிப்பது போல அவளுக்கு தோன்றியது. அவளுக்கு சந்தேகம் அதிகரித்ததும் இடுப்பில் இருந்த குறுவாளை கையில் எடுத்து கொண்டு முன்னாடி சலசலப்பு ஏற்பட்ட புதரை நோக்கி,
“யாரது… யாரா இருந்தாலும் மரியாதையா வெளியே வந்துடுங்க..” என்றாள்.
யாரும் வெளியேறவில்லை. ஆனால் நிச்சயமாக யாரோ அந்த புதருக்குள் இருப்பதை உணர்ந்து கோபத்தில் அந்த இடத்தை நெருங்கி சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு இருக்கும் போது சட்டென இருட்டில் இருந்து ஒரு கை அவளை வாயை மூடி இழுத்து கொண்டது.
தொடரும்…….
ALF. Sanfara.
“வா….வ்… நம்ம இளவரசி அப்போ இவங்க.. அப்போ நானும் உங்க கூட வருவேன்.” என்று துள்ளினாள் சோஃபி. “இங்க பாரு சோஃபி… நீ ரொம்ப சின்ன பொண்ணு… உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு… இப்படி எங்க…
“வா….வ்… நம்ம இளவரசி அப்போ இவங்க.. அப்போ நானும் உங்க கூட வருவேன்.” என்று துள்ளினாள் சோஃபி. “இங்க பாரு சோஃபி… நீ ரொம்ப சின்ன பொண்ணு… உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு… இப்படி எங்க…