அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 16
- by admin
- 11
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
ஒரு மாபெரும் தேனீக்கள் படை எங்கிருந்து இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. ரியூகி வாளை எடுத்து அவற்றுக்கு விசுக்கி விசுக்கி விலக்க பார்த்தான், முடியவில்லை. அலைஸ் அவனை பார்த்து சிரித்து விட்டு,
“உங்க வாளால் எல்லாம் இவற்றை சமாளிக்க முடியாது.” என்றாள்.
“அதுக்கு இப்போ என்ன பண்ணலாம் எங்குறே?” என்று மறுகேள்வி கேட்டான் ரியூகி.
“என்ன பண்ணனும் என்னு தெரியல. ஒரு வேளை அதுங்க கிட்ட சொல்லி பார்க்கலாமா?” என்று கேட்டு கொண்டு இருக்கும் போது ஒரு படை அவளை நோக்கி வேகமாக வரவே அவள் பயத்தில் வலது கையை முன்னாடி நீட்டிக்கொள்ள என்ன அதிசயம் அவை அனைத்தும் கலைந்து சென்று விட்டன. எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம்.
“வாவ்.. என்ன பண்ணே நீ” என சோஃபி வியந்து கேட்க
“எனக்கே தெரியாது.” என்றவள் மயக்கம் போட்டு விழப்போக எல்லோருமாக சேர்ந்து பிடித்து நிறுத்தினர்.
“மாஸ்டர் ஷா சொன்னது போலவே உன்னோட சக்திகள் கொஞ்சம் கொஞ்சமா வெளிய வர ஆரம்பிச்சிடுச்சு என்னு நினைக்கிறேன்.” என்றான் ரியூகி.
அவள் குழப்பத்தில் அவள் கையை பார்க்க அதிலே ஒரு அம்புக்குறி தெரிந்தது.
“என்னது இது புதுசா”
“ஒரு வேளை பிரின்சஸ் கோரின் இருக்குற திசையை காட்டுத்தோ என்னவோ.” என கியோன் சொன்னான்.
“அப்படின்னு தான் என்னோட மனசும் சொல்லுது.” என்றாள்.
“அப்போ வாங்க போகலாம்.” என்றாள் சோஃபி.
“இனி அப்போ பிரச்சினை இல்லாம அவங்கள தேட முடியும் இல்லியா அவங்களுக்கு என்ன சக்தி கிடைச்சிடுகிச்சு…” என்று சீண்டினான் ரியூகி.
“போதும் நீ உன் வாயை மூடு. அவளே டென்ஷனில் இருக்கா… நீ வேற… நேரம் காலம் புரியாம” என்று சோஃபி சொல்ல உண்மையில் அவனுக்கு ஒரு மாதிரி போய் விட்டது.
அப்பறம் எல்லோரும் ஊருக்குள் நுழைந்தனர். சுற்றும் முற்றும் பார்த்தனர். கையில் இருந்த அம்புக்குறி பட் பட்டன ஒரே திசையில் காட்டி கொண்டு இருந்தது. அந்த பக்கமாய் பார்த்த போது சந்தைக்குள் ஒரு பெண் யாரோ ஒரு ஆணுடன் வாய்த் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தாள். அவர்கள் பார்த்த போது கையில் இருந்த சமிக்கையும் மறைந்துவிட்டது.
“கண்டிப்பாக அது அவளே தான்.” என்றாள் அலைஸ் உணர்ச்சி பொங்க..
“கோரின்!…கோரின்..” என்று அழைத்து கொண்டே அவளை நெருங்க, அவள் திரும்பி பார்த்து,
“யாரு நானா..”
“ஆமா… நீங்கதான்…”
“நீங்க யாரு… என்னோட பெயரை உங்களுக்கு எப்படி..” என்று அவள் குழப்பத்தில் கேட்டாள்.
“நாம நிறைய விஷயங்கள் பேசவேண்டி இருக்கு பேசலாமா?” என்று கேட்டாள் அலைஸ்.
“ஹ்ம்ம்… கண்டிப்பா… பக்கத்தில் தான் என்னோட வீடு வாங்க அங்கேயே போகலாம்.” என்று வந்தவர்களை அழைத்து கொண்டு முன்னாடி நடந்தாள் கோரின். பின்னால் கியோன் சோஃபியிடம்,
“நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்றான்.
“என்னடா…”
“அதில்ல… உன்னை பார்க்க முதல் இவங்கள பார்த்து இருந்தா… அவர்களுக்கே ஐ லவ் யூ… சொல்லி இருப்பேன்.” என்று அவளை சீண்ட,
“டேய்… உன்னை.” என்று அவன் காதை திருகினாள்.
“ஆஹ்…. விடு டி வலிக்குது.” என்று கத்த ரியூகி திரும்பி,
“என்ன பிரச்சினை உங்களுக்கு.” என்று கேட்டான்.
“அது ஒன்னுமில்ல ரியூகி இவனுக்கு காது சரியா கேக்கலியாம். அதுதான் நம்ம வைத்தியத்தை செஞ்சி விட்டேன்.” என்றாள் சோஃபி. கொஞ்ச நேரத்தில் கோரின் வீட்டை அடைந்தனர் எல்லோரும்.
“உள்ளே வாங்க…” என்று அவள் அழைக்க எல்லோரும் உள்ளே சென்றனர். ஆனால் ரியூகி காலை வைத்த போது, ஏதோ மின்சாரம் தாக்குவது போல் உணர்ந்தான்.
“என்ன அங்கேயே நின்னுடீங்க வாங்க” என்று கோரின் அழைத்தாள்.
“ஹ்ம்ம்…” என்றவன் மறுபடியும் அதே ஷாக் உணர்வு ஏற்பட்டும் உள்ளே சென்றான். இங்கு ஏதோ தப்பாக இருப்பதை அவனால் லேசாக உணர முடிந்தது.
தொடரும்……
ALF. Sanfara.
ஒரு மாபெரும் தேனீக்கள் படை எங்கிருந்து இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. ரியூகி வாளை எடுத்து அவற்றுக்கு விசுக்கி விசுக்கி விலக்க பார்த்தான், முடியவில்லை. அலைஸ் அவனை பார்த்து சிரித்து விட்டு, “உங்க வாளால்…
ஒரு மாபெரும் தேனீக்கள் படை எங்கிருந்து இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. ரியூகி வாளை எடுத்து அவற்றுக்கு விசுக்கி விசுக்கி விலக்க பார்த்தான், முடியவில்லை. அலைஸ் அவனை பார்த்து சிரித்து விட்டு, “உங்க வாளால்…