இயற்கையே
- by admin
- 20
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
வானம் கறுத்திருந்த மாலைப்பொழுது
தூவானம் சிந்துகின்ற மழைப்பொழுது
குளிர்காற்றின் தழுவலில்
கூந்தல் கலைந்து நடன ஒத்திகை பார்க்க
புகைப்படமெடுக்க வந்தது மின்னல்
சந்தோஷக் கரவொலியாய் இடியோசை
கருக்கொண்ட மேகங்கள்
பாய் விரித்தாற் போல் இருக்க
அசைந்தாடும் தாவரங்கள்
அழகாகச் சாமரங்கள் வீசிநிற்க
தூரத்து மலை மேலே
சுருள் சுருளாய்ப் புகை பயணம்
இருள் சூழும் வேளையிலே
இதமாக ஒரு மாற்றம்
மனமெங்கும் இயற்கையுடன்
ஆடுகின்ற மலர்க்கூட்டம்
இயற்கையின் நிகழ்வுகள்
இணையில்லாக் கவிதைகள்
மக்கொனையூராள்
வானம் கறுத்திருந்த மாலைப்பொழுது தூவானம் சிந்துகின்ற மழைப்பொழுது குளிர்காற்றின் தழுவலில் கூந்தல் கலைந்து நடன ஒத்திகை பார்க்க புகைப்படமெடுக்க வந்தது மின்னல் சந்தோஷக் கரவொலியாய் இடியோசை கருக்கொண்ட மேகங்கள் பாய் விரித்தாற் போல் இருக்க…
வானம் கறுத்திருந்த மாலைப்பொழுது தூவானம் சிந்துகின்ற மழைப்பொழுது குளிர்காற்றின் தழுவலில் கூந்தல் கலைந்து நடன ஒத்திகை பார்க்க புகைப்படமெடுக்க வந்தது மின்னல் சந்தோஷக் கரவொலியாய் இடியோசை கருக்கொண்ட மேகங்கள் பாய் விரித்தாற் போல் இருக்க…