Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இறைக்கருவூற்றில் இருந்து. 

இறைக்கருவூற்றில் இருந்து.

  • 35

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஆலமரவிழுதுகளாய்
அதன் ஒவ்வொரு
திரைக்குப் பின்னும்
மறைந்த செவ்வெறும்புகளாய்

தீராத அறிவுப்பசியைத்
தணிக்க
ஓரிரு நாளிகைகள்
அறிவுக்கலாசாலை
நிழலில் தொடரும்

மாமிசப்பிண்டத்தை வருடி
உண்ணும் உயிர் வளர்ந்து
பெருத்துச் சிரிக்கும்

சில வசந்த காலங்ளிலும்
சிறகடிக்கும் பட்டாம் பூச்சின்
வர்ணஜாலங்கள் பூக்க
இதமான தென்றலும்
உடலை வருடிச்செல்லும்

இறையருளின் துமிகள்
உடலை உறுத்தும்
தித்திக்கும் உன்னத
தருணங்கள்

நிலவின் ஒளியும்
விலைக்கு வாங்கி விற்று
நட்சத்திர ஒளியைத் தேடும்
மின்மினிகள் பல
கதிரவனின் கற்றைனில்
பட்டுத்தெறிக்கும் சிதறல்களாய்

மணவானின் புள்ளிகளைக்
கண்ட நயனங்களும் உண்டோ?
உறகக் கண்களுடன்
குட்டித்தூக்கம் போட்டுக்கிடக்கும்
வியர்வை வாடையாய்
வீசும் சுயநலத்தோடு
கருமேகத்தில் பளிச்சிடும்
ஒளிக்கீற்று
மனக்கிடங்கிலிருந்து கட்டவிழும்
ரகசியமொழியை விளங்கி

தனிமையிலும் உற்ற துணையாய்
அத்தியந்தமாய் ஆத்மார்த்தமாய்
காதோரமாய் கணதினான
பாடங்களைச் கிள்ளை மொழியில்
சொல்லித் தந்து
சொல்லி கண்களை நனைக்கும்

அவ்வுன்னத உறவு
எதுவெனத் தேடுகிறாயா ?
அவன் தான் நித்திய ஜீவனாய்
அனைத்தையும் தன்
அறிவால் சூழ்ந்த நிகரற்றவன்

கன்னியின் வெள்ளோட்டக்கவி
பின்த் பஸ்லூன்

ஆலமரவிழுதுகளாய் அதன் ஒவ்வொரு திரைக்குப் பின்னும் மறைந்த செவ்வெறும்புகளாய் தீராத அறிவுப்பசியைத் தணிக்க ஓரிரு நாளிகைகள் அறிவுக்கலாசாலை நிழலில் தொடரும் மாமிசப்பிண்டத்தை வருடி உண்ணும் உயிர் வளர்ந்து பெருத்துச் சிரிக்கும் சில வசந்த காலங்ளிலும்…

ஆலமரவிழுதுகளாய் அதன் ஒவ்வொரு திரைக்குப் பின்னும் மறைந்த செவ்வெறும்புகளாய் தீராத அறிவுப்பசியைத் தணிக்க ஓரிரு நாளிகைகள் அறிவுக்கலாசாலை நிழலில் தொடரும் மாமிசப்பிண்டத்தை வருடி உண்ணும் உயிர் வளர்ந்து பெருத்துச் சிரிக்கும் சில வசந்த காலங்ளிலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *