இளைஞனே நீ புறப்படு
- by admin
- 23
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
கரை காணாத நதியைப் போல ஓடி
கதியிலே நீ வாடி விழுவதேனோ
வாழ்வதற்கு விதிகளுண்டு கேளு
அது மறந்தால்
வீணாகும் இளமையின் தோளு
தீமைகள் நிறைந்தது தான் பூமி
நன்மைகளை நீ விதைத்துக் காண்பி
உள்ளத்தில் இறைவனை நிறுத்து
பொல்லாங்கு அத்தனையும் துறத்து
கண் முன்னே காண்பவற்றின் மாயம்
கருத்தாலே நீ உணர்தலே நியாயம்
தொட்டாலே சுட்டுவிடும் தீயும்
அறிவுரைகள் ஏற்றிடுவாய் நீயும்
வானமாய் நீயும் விரிந்திடு
சமுதாயக் கனவுகளுக் கிடங்கொடு
வன்முறைகள் அங்கே விலங்கிடு
சீர்திருத்தவாதியாய் விளங்கிடு
இளைஞனே நீ புறப்படு
இதயத்தில் நேர்மை புகுத்திடு
இறகுகள் நீ விரித்திடு
இலட்சியம் நோக்கி படையெடு
போனவை இனி போகட்டும்
இருப்பதை நீ சிறக்கவை
தனியன் என தயங்காதே
நீ ஆரம்பித்து வைத்தால்
அணி திரளும்
மக்கொனையூராள்
கரை காணாத நதியைப் போல ஓடி கதியிலே நீ வாடி விழுவதேனோ வாழ்வதற்கு விதிகளுண்டு கேளு அது மறந்தால் வீணாகும் இளமையின் தோளு தீமைகள் நிறைந்தது தான் பூமி நன்மைகளை நீ விதைத்துக் காண்பி…
கரை காணாத நதியைப் போல ஓடி கதியிலே நீ வாடி விழுவதேனோ வாழ்வதற்கு விதிகளுண்டு கேளு அது மறந்தால் வீணாகும் இளமையின் தோளு தீமைகள் நிறைந்தது தான் பூமி நன்மைகளை நீ விதைத்துக் காண்பி…