எங்கே குடியரசு?
- by admin
- 7
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
எத்திசை ஏகினும்
சத்தியமின்றி வாழும்
சித்திரவதைக் கூட்டத்தின் எச்சம்
மனதின் இச்சைக்கு இணங்கி
பாவத்தினை துச்சமாய் நினைத்து
வேசம் போட்டு நாசம் செய்யும்
மோசக்காரக் கூட்டம்
வன்முறை வார்த்தைகளால்
வசைகளைப் பொலிந்தே
காட்டிக் கொடுத்தும் கூட்டிக் கொடுத்தும்
குளிர் காயும் கொடுமைக்காரக் கூட்டம்
இரத்தம் உறிஞ்சும்
அட்டைப் பூச்சிகளாய்
மனிதக் குரல்வளை நசித்து
குருதி உறிஞ்சும் பாதகர் கூட்டம்
குடியரசைத் தேடுகிறேன்
புகழ் எனில் பல்லிளிக்கும்
புத்திகெட்ட மாந்தரினால்
அராஜக ஆட்சியினில்
மீட்சியின்றியே சந்ததிகள் மாளும்
பிஞ்சுகளைப் பதம் பார்க்க அஞ்சிடாத
நஞ்சினை மிஞ்சிய வஞ்சகரை அஞ்சுகிறேன்
நாளை மனித குல வரலாற்றை
இரத்தத்தால் எழுத வேண்டுமோ?
நிலாக்கவி நதீரா முபீன்
புத்தளம் (புளிச்சாக்குளம்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்
எத்திசை ஏகினும் சத்தியமின்றி வாழும் சித்திரவதைக் கூட்டத்தின் எச்சம் மனதின் இச்சைக்கு இணங்கி பாவத்தினை துச்சமாய் நினைத்து வேசம் போட்டு நாசம் செய்யும் மோசக்காரக் கூட்டம் வன்முறை வார்த்தைகளால் வசைகளைப் பொலிந்தே…
எத்திசை ஏகினும் சத்தியமின்றி வாழும் சித்திரவதைக் கூட்டத்தின் எச்சம் மனதின் இச்சைக்கு இணங்கி பாவத்தினை துச்சமாய் நினைத்து வேசம் போட்டு நாசம் செய்யும் மோசக்காரக் கூட்டம் வன்முறை வார்த்தைகளால் வசைகளைப் பொலிந்தே…