எங்கே செல்லும் இந்தப் பாதை
- by admin
- 49
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
மக்கள் வெள்ளம் அலை மோதும்
வீதிகள் வெறிச்சோடி கிடக்கிறது – இரவு
பகல் இன்றி இயங்கிய பொழுதுகள்
இருட்டி போயுள்ளன…
நானா நீயா
என்ற அகங்கார அரசியல் பேச்சுகள்
அடங்கி போயிருக்கின்றன…
ஐந்தறிவு ஜீவன்கள்
ஐயமின்றி சுற்ற
ஆறறிவு மனிதன்
ஆடிப்போயிருக்கிறான்…
ஓடி ஓடி உழைத்த கால்கள்
ஓய்ந்து போய் இருக்கிறது ஓரமாக…
பணத்தாசை பதவிமோகம்
அதிகாரதிமிர் – அனைத்தையும் அடித்து நொறுக்கி
மதுவையும் மாதுவையும் மறக்கடித்து
குடியையும் கூத்தையும் குழி தோண்டி புதைத்து
ஏழை- பணக்காரன் ஏதுமின்றி
பிணமாகிறான் மனிதன்…
உச்சம் தொட்ட உலக நாடுகள் அச்சம் கொண்டிருக்க பொறுப்பில்லா சில
உள்ளங்கள் உலாவி திரிகின்றன…
சட்டத்தை மதித்து வீட்டுக்குள் இருந்தே விரட்டுவோம் விஷக் கிருமியை…
சோதனையா வேதனையா
தொட்டு கேளுங்கள் தட்டி
எழுப்புங்கள் உள்ளங்களை…
முயற்சிகள் கைமீற
உயிர்கள் விடைபெற உலகம்
உறங்கிக் கிடக்கிறது உற்சாகமின்றி…
எங்கே செல்லும் இந்தப் பாதை
ஆக்கமா அழிவா
விடைத்தேடுவோம்..!
Rushdha Faris
South Eastern University of Sri Lanka
Corona Update
[cov2019]
மக்கள் வெள்ளம் அலை மோதும் வீதிகள் வெறிச்சோடி கிடக்கிறது – இரவு பகல் இன்றி இயங்கிய பொழுதுகள் இருட்டி போயுள்ளன… நானா நீயா என்ற அகங்கார அரசியல் பேச்சுகள் அடங்கி போயிருக்கின்றன… ஐந்தறிவு ஜீவன்கள்…
மக்கள் வெள்ளம் அலை மோதும் வீதிகள் வெறிச்சோடி கிடக்கிறது – இரவு பகல் இன்றி இயங்கிய பொழுதுகள் இருட்டி போயுள்ளன… நானா நீயா என்ற அகங்கார அரசியல் பேச்சுகள் அடங்கி போயிருக்கின்றன… ஐந்தறிவு ஜீவன்கள்…