Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
எதற்கிந்தத் தண்டணை 

எதற்கிந்தத் தண்டணை

  • 14

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தன் பால் சுரந்து
தன் தூக்கமிழந்து
தாலாட்டி உன்னை வளர்த்துவிட்டது
எதிரில் நின்று
எட்டி உதைத்திடத்தானா

தாயவள் மூதாட்டி என்று
தள்ளிவிட்டாயோ
நாளை உன் பிள்ளை
உன்னை உதைத்து விடமாட்டானா

அவள் இரத்தம் உன்னோடு
உன் இரத்தம் உன் பிள்ளையோடு
இளவயதில் உள்ளதால்
முதுமை உன் மூக்கைப் பிடிக்க வைக்கிறதோ

தாயை ஒதுக்கி விடாதே
நெருப்புமழை பூமிக்கி இறங்கிவிடும்
மனிதம் இழந்த மனிதனே
மண்ணில் உள்ள தெய்வம் இவளடா
அவள் மடியினில் தவழ்ந்த
நாட்களை என்னித்தான் கொஞ்சம் பாரடா
இந்தப் பாரே அவள் போட்ட பிச்சைதானடா

பஞ்சம் இருந்தும் பட்டனி போட்டாளா உன்னை
பசி போக்கிட மறந்தாளா உனக்கு
பாசம் என்றதை உணர்த்திடாததற்காகவா
இந்தத் தண்டணை இல்லை
உயிர் பிரியும் வரை தஞ்சம் கேட்கிறாள்
என்றுதானா இந்தத் தண்டணை

இறக்கம் இழந்தவனே
இந்தக் கண்ணீரால்
அந்தக் கடவுளிடம் இருந்து
நெருக்கம் இழந்துவிட்டாயடா

கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை – 08

தன் பால் சுரந்து தன் தூக்கமிழந்து தாலாட்டி உன்னை வளர்த்துவிட்டது எதிரில் நின்று எட்டி உதைத்திடத்தானா தாயவள் மூதாட்டி என்று தள்ளிவிட்டாயோ நாளை உன் பிள்ளை உன்னை உதைத்து விடமாட்டானா அவள் இரத்தம் உன்னோடு…

தன் பால் சுரந்து தன் தூக்கமிழந்து தாலாட்டி உன்னை வளர்த்துவிட்டது எதிரில் நின்று எட்டி உதைத்திடத்தானா தாயவள் மூதாட்டி என்று தள்ளிவிட்டாயோ நாளை உன் பிள்ளை உன்னை உதைத்து விடமாட்டானா அவள் இரத்தம் உன்னோடு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *