எது ஊனம்?
- by admin
- 25
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
ஊனம் எது என்று உணர்வாய் சொல்ல
இது என் உணர்வலைகள்
நான் கண்ட ஊனத்தின்
சில அடிப்படையில் எத்தனிக்கின்றேன்
நீ உலகைக் கண்கொண்டு அதில்
இயற்கையை ரசிக்கிறாய்
பல முகமூடி மனிதம் கண்டு
அவன் செயல் தூற்றி புறம் புகழ்கிறாய்
வலதால் கொடுத்து பின்
அதை இடதாய் அழைக்கின்றாய்
தியேட்டர் காட்சிக்கு நடைபோட்டு
டிக்கெட் எடுக்கிறாய் ஆனால்
மார்க்க சபைக்கு உன்
கால்களை முடக்குகின்றாய்
நாலு பேரை புறம் பேச
நாவுக்கு நேரம் எடுத்து
திக்ருக்கு விடை கொடுக்கிறாய்
ஆனால் ஷகராத்தில் நேரமிழந்து
பரிதவிக்கிறாய் ஒரு நிமிடம் பிந்தாதா என
கொஞ்சம் நில் ஒரு சில உன்னிடம்
கெட்டவை புகழ்ந்தாயா?
கெட்டவை பார்த்தாயா?
கெட்டவை கேட்டாயா?
கெட்டவைக்கு உன் கரம் கொடுத்தாயா?
கெட்டவைக்கு நடை போட்டாயா?
என்ற இந்த கேள்விக்கு
ஈமான் இழந்த உன்னிடம்
தான் பதில் அதிகம்
இப்போது சொல் எது ஊனம்
உன் உடம்பா?
இல்லை உன் மனதா ?
K. Fathima Risama
Nintavur.
SEUSL.
வௌியீடு : வியூகம் வெளியீட்டு மையம்
ஊனம் எது என்று உணர்வாய் சொல்ல இது என் உணர்வலைகள் நான் கண்ட ஊனத்தின் சில அடிப்படையில் எத்தனிக்கின்றேன் நீ உலகைக் கண்கொண்டு அதில் இயற்கையை ரசிக்கிறாய் பல முகமூடி மனிதம் கண்டு அவன்…
ஊனம் எது என்று உணர்வாய் சொல்ல இது என் உணர்வலைகள் நான் கண்ட ஊனத்தின் சில அடிப்படையில் எத்தனிக்கின்றேன் நீ உலகைக் கண்கொண்டு அதில் இயற்கையை ரசிக்கிறாய் பல முகமூடி மனிதம் கண்டு அவன்…