ஓர் அனாதையாய்
- by admin
- 74
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
விழி இரண்டும் குளமாகி
அழுது தவித்து ஓடிவந்தேன்
அங்கே என் குழந்தை
கருகி இறக்கத் துடிக்கிறது
கயவன் விதைத்த தீ எம்
கனவை பொசுக்கி எரிக்கிறது
காதல் மனைவி தீயில் விழ
கைக் குழந்தை
தாய்மடி இணைய
பாய்ந்து சென்று கைகொடுக்க
கை வழுக்க
உடல் சிலிர்க்க
நான் தவிக்க
கண்ணீர் மட்டுமே
எனக்காய் இருந்தது
ஒற்றை நாளில்
உடைந்த வாழ்க்கை
நேற்று என்னில்
எதிர் மையாய் இருந்தது
ஆற்று ஓரத்தில்
அழகாய் ஒரு வீடு
மெல்லிசை பாடிய குருவிகள்
ஒழிந்து கொண்டே
ஒளியை விதைத்த மின்மினிகள்
தென்றல் தந்த மரங்கள்
காதில் தேனை விதைத்த சலசலப்பு
பஞ்சாய் விரிந்த சருகுகள்
அதில் ஊர்ந்து திரிந்த சாரைகள்
வான் முழுதும் தாரைகை நிறைய
வழி நெடுக ஒழி கொடுக்க நிலா
இன்று தீயின் காயம்
உடலை வருத்த
பிரிவின் சோகம்
உளத்தை நொறுக்க
உன் கால்களில் தஞ்சம் கோருகிறேன்
அமேசோனின் ஓர் அனாதையாய்
நன்றியுடன்
நான் கவிஞன்
வியூகம் வெளியீட்டு மையம்
விழி இரண்டும் குளமாகி அழுது தவித்து ஓடிவந்தேன் அங்கே என் குழந்தை கருகி இறக்கத் துடிக்கிறது கயவன் விதைத்த தீ எம் கனவை பொசுக்கி எரிக்கிறது காதல் மனைவி தீயில் விழ கைக் குழந்தை…
விழி இரண்டும் குளமாகி அழுது தவித்து ஓடிவந்தேன் அங்கே என் குழந்தை கருகி இறக்கத் துடிக்கிறது கயவன் விதைத்த தீ எம் கனவை பொசுக்கி எரிக்கிறது காதல் மனைவி தீயில் விழ கைக் குழந்தை…