கால எச்சரிக்கை
- by admin
- 20
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
எதிர்காலம் என்னவென்று
எண்ணுவதற்கு எத்தனிக்கையில்
எண்ணத்தில் எத்தனையோ
எதிர்ப்புகள் எழுகிறது
விஸ்தரிப்பெனும் பெயரில்
வெட்டப்பட்ட மரங்களால்
பாதைகளும் பாலைவனமாகி
கட்டட விருட்சங்கள்
வியாபித்து நிலைத்திட
விளைநிலங்களும் வீணாகிவிடும்
பொல்லாத ஓசோனால்
வருங்கால நுரையீரல்
நிரம்பி வழிந்திட
உணவையே வில்லைகளாக்கி
விழுங்கிடவேண்டி வரும்
வண்டல் குவியும்
வளமுறு நெய்தலும்
வஞ்சகன் சூழ்ச்சியால்
வாரி அழிக்கப்படும்
கள்ளத்தனங்கள்
மெல்ல வந்துசேர
பூத்துக் கிடந்த முகங்களும்
காய்ந்து போகும்
குண்டு மழையும்
கொடூரமாய்ப் பொழிய
விலையில்லா வாழ்வும்
நிர்க்கதியுற்று வாடும்
நிலாக்கவி நதீரா முபீன்,
புத்தளம்.
எதிர்காலம் என்னவென்று எண்ணுவதற்கு எத்தனிக்கையில் எண்ணத்தில் எத்தனையோ எதிர்ப்புகள் எழுகிறது விஸ்தரிப்பெனும் பெயரில் வெட்டப்பட்ட மரங்களால் பாதைகளும் பாலைவனமாகி கட்டட விருட்சங்கள் வியாபித்து நிலைத்திட விளைநிலங்களும் வீணாகிவிடும் பொல்லாத ஓசோனால் வருங்கால நுரையீரல் நிரம்பி…
எதிர்காலம் என்னவென்று எண்ணுவதற்கு எத்தனிக்கையில் எண்ணத்தில் எத்தனையோ எதிர்ப்புகள் எழுகிறது விஸ்தரிப்பெனும் பெயரில் வெட்டப்பட்ட மரங்களால் பாதைகளும் பாலைவனமாகி கட்டட விருட்சங்கள் வியாபித்து நிலைத்திட விளைநிலங்களும் வீணாகிவிடும் பொல்லாத ஓசோனால் வருங்கால நுரையீரல் நிரம்பி…