காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 76
- by admin
- 11
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
“கில்கி! உன்னை பார்த்தா எனக்கு செம்ம காமெடியா இருக்கு… ஜெனியை உனக்கு அவ்வளவு பிடிக்குமா? ஆமா உனக்கு எப்போ இருந்து அவ மேல ஒரு இது?” என்று டிடானியா அவனை சீண்டினாள்.
“முதல்ல என்னை அப்படி கூப்பிடாதே! அதை கேட்டாலே எனக்கு கோபம் கோபமா வருது.” என்றான் கில்கமேஷ்.
“சரிங்க மா மன்னரே! அப்போ கேள்விக்கு பதில்?”
“சும்மா ஏன் அவனை சீண்டுரே! வாய வெச்சிட்டு சாதாரணமாக இருக்கவே மாட்டியா?” என விக்டர் அவளை முறைத்தான்.
“நீ குறுக்க வராதே! நான் நம்ம காவிய தலைவன் கிட்ட எவ்வளவு இம்போடன்ட் ஆன கேள்வி கேட்டு இருக்கேன்.”
“இப்போ உனக்கு என்னதான் வேணும்…?” என கில்கமேஷ் கேட்டான்.
“உனக்கு எப்போ இருந்து ஜெனியை பிடிக்கும் ஐ மீன். எப்போ இருந்து அவளை காதலிக்க ஆரம்பிச்சே!” என்று கேட்டாள்.
“தெரியல…. அவளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு முதலில் என்கிடு தான் நியாபகத்துக்கு வருவான். அவளோட சிந்தனைகள் எல்லாமே அப்படியே என்கிடுவை போல் இருக்கும்.” என்று மறுபடி என்கிடு புராணம் படிக்க ஆரம்பித்தான்.
“ஹேய் வெயிட் வெயிட்… அப்போ என்கிடு ஒரு பொண்ணா இருந்தா அவளை தான் கல்யாணம் பண்ணி இருப்பியோ!” என்று சீரியஸாக கேட்டாள்.
இதற்கான பதிலை கேட்க விக்டரும் ஆர்வமாக இருந்தான்.
“என்ன ஒளர்ர! அதெப்படி முடியும். என்கிடு என்னோட உயிர் நண்பன் எனக்கு உடன்பிறக்காத சகோதரன் போல என்னோட அம்மாவும் அவனை அவங்க சொந்த பையனை போலவே பார்த்து கிட்டாங்க. அவன் இல்லை என்ற ஒரு நிலை வந்ததும் நான் என்னோட ஒட்டுமொத்த சக்தியையும் இழந்துவிட்டதாக நினைச்சேன். அவன் என்னோட பலமாக, எனக்கு ஒரு நலன்விரும்பியாக உற்ற நண்பனாக இருந்தான். இருப்பான்.” என்று சொல்லி முடித்தான்.
“ஓஹ்…. அப்போ உனக்கு ஜெனியை விட என்கிடு மீது தான் பாசம் அதிகம்.” என்றாள் டிடானியா.
“அது வேற… இது…. வேற… ஜெனியை என்னோட மனைவியா ஆக்கி கொள்ளனும் என்கிற எண்ணம் எனக்குள்ள எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனா, அவள் இல்லாத ஒரு வாழ்க்கையை நான் வாழ விரும்பல்ல… நான் அவளை அந்த அளவு காதலிக்கிறேன்.” என்றான்.
இதை கேட்டுக்கொண்டு இருந்த விக்டர் திடீரென கில்கமேஷை பார்த்து..
“என்கிடுவா ஜெனியா என்று ஒரு நிலைமை வந்தால் நீ யாரை சொய்ஸ் பண்ணுவே?” என்று கேட்க டிடானியாவும் கில்கமேஷும் அதிர்ச்சி அடைந்தனர்.
“விக்கி, ஏன் இப்படி???” என்று அவள் கேட்க,
“இவ்வளவு நேரம் நீ கேட்டே இல்ல, இப்போ என்னோட கேள்விக்கும் பதில் சொல்லட்டும்” என்று கில்கமேஷை பார்த்தான்.
அவனால் பதில் சொல்ல முடியவில்லை. முடியவும் முடியாது, விக்டர் அவன் பதிலுக்காக காத்திருந்தான். சட்டென கில்கமேஷ் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.
“ஏய்! ஸாரி கில்கமேஷ் இவன் ஏதோ விளையாட்டுக்கு.” என்று டிடானியா எழுந்து,
“லூசு, அங்க பாரு அவன் அப்சட் ஆகி எங்கயோ போறான். உன்னை வந்து கவனிச்சிக்கிறேன்.” என்று கில்கமேஷை கூப்பிட்டு கொண்டே டிடானியா ஓட விக்டர் கையில் இருந்த பெப்சியை குடித்து முடித்து விட்டு சாவகாசமாக உட்கார்ந்து கொண்டான்.
கில்கமேஷ் காரை எடுத்து கொண்டு எங்கோ செல்ல பின்னாடியே ஒரு டாக்சியை பிடித்து கொண்டு டிடானியா அவனை பின் தொடர்ந்து சென்றாள்.
****************
சுற்றும் முற்றும் பார்த்தால் அந்த அறையிலேயே ஒரு சி சி டிவி கேமரா ஜெனியை உருட்டி மிரட்டி கொண்டு இருந்தது.
“ஷிட், இங்கேயும் ஒரு கேமரா இருக்கே…. இதெல்லாம் மீறி எப்படி என்கிடு கிட்ட பேசுறது…” என்று ஒருபுறம் யோசித்தாலும் மறுபுறம் அவளது தன்னம்பிக்கை விட்டுக்கொடுக்காமல் பேசியது.
“என்ன ஜெனி நீ.. ஊசியை கூட சமாளிச்சிட்டே, இந்த தூசியை பற்றி யோசிக்குறியே… கண்டிப்பா நாம ஜெயிக்க தான் போறோம்.”என்கிறது.
“ஹப்பா…. நமக்கு உதவி பண்ண நம்ம மனசாட்சி போதும்.” என்று என்கிடு வருகைக்காக காத்திருந்தாள் ஜெனி.
“இந்நேரம் நம்ம பசங்க நம்மளை வலைவிரிச்சு தேடிக்கிட்டு இருப்பாங்களே! நாம எங்க இருக்கோம் என்னநிலையில் இருக்கோம் என்று சொல்லிட வேண்டியது தான்.” என்றெண்ணி கொண்டு மைக்ரோ போனை ஆன் செய்யலாம் என்றெண்ணி காதருகே கையை வைத்தால் அதை காணும்.
“வாட்!!!! எங்க போச்சு காதில் தானே மாட்டி இருந்தேன்” என்று பதறிக்கொண்டு அங்கும் இங்கும் தேட ஆரம்பித்தாள். கேமராவில் இதை பார்த்து கொண்டிருந்தவனுக்கு சந்தேகம் வரவே ,அவன் உள்ளே வந்து ஜெனி கிட்ட,
“என்ன தேடுறே ?”என்று கேட்டான்.
“என்னோட தோடு” என்றவள் அவன் இருப்பதை பொருட்படுத்தாது மீண்டும் தேட அவனும் அதை நம்பிக்கொண்டு கிளம்பி விட்டான். அவன் வெளியே போகவும் என்கிடு உள்ளே வரவும் சரியாக இருந்தது. என்கிடு உள்ளே வந்ததும் கூட கவனிக்காது அங்கும் இங்கும் குனிந்து தேட அவளது தலைமுடி சரிந்து மறைத்து கொண்டு இருந்தது. அவள் கட்டிலுக்கு அடியில் தேடும் போது அருகில் வந்து அவனும் கட்டிலுக்கு கீழே பார்த்தான்.
“ஆமா என்ன தேடுறே என்று சொன்னா நானும் உதவுவேன்.” என்றான்.
திடீரென காதருகே ஆண் குரல் கேட்டதும் பயத்தில் தடுமாறி அவன் மடியில் விழுந்தாள் ஜெனி.
மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்
“கில்கி! உன்னை பார்த்தா எனக்கு செம்ம காமெடியா இருக்கு… ஜெனியை உனக்கு அவ்வளவு பிடிக்குமா? ஆமா உனக்கு எப்போ இருந்து அவ மேல ஒரு இது?” என்று டிடானியா அவனை சீண்டினாள். “முதல்ல என்னை…
“கில்கி! உன்னை பார்த்தா எனக்கு செம்ம காமெடியா இருக்கு… ஜெனியை உனக்கு அவ்வளவு பிடிக்குமா? ஆமா உனக்கு எப்போ இருந்து அவ மேல ஒரு இது?” என்று டிடானியா அவனை சீண்டினாள். “முதல்ல என்னை…