கொரோனாவே நீ வென்று விட்டாய்
- by admin
- 41
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
உன் நாமம் கேட்டு பயந்தோம் நாம்
உனை அழிக்க பலவும் செய்தோம் நாம்
ஆனால் நீயோ கைகோர்த்துக் கொண்டாய்
நம்முடன் வாழ பழகிக் கொண்டாய்
சமூக இடைவெளி பேண வைத்தாய்
குடும்ப பாசத்தை புரிய வைத்தாய்
நீயோ மனிதனை தூரமாக்கினாய்
ஆனால் இறையோனை நெருங்கச் செய்தாய்
கல்விக் கூடங்களை மூட வைத்தாய்
கச்சிதமாய் அறிவுக் கண்ணை திறந்து வைத்தாய்
நீயோ தனிமையை போதித்தாய்
சாதி பேதத்தை மறந்தாய்
நேரம் மறந்து ஓய்வை இழந்து
கதிகலங்கிய மாந்தருக்கு
நிமிடத்தின் நிம்மதியை
ஊக்கத்துடன் ஊட்டினாயே
நீயோ வீண்செலவை குறைத்து விட்டாய்
உழைப்பின் மகிமையை உணர்த்தி விட்டாய்
பணத்திமிரை உடைத்தெறிந்தாய்
வறுமைக்கு விளக்கமளித்தாய்
நீயோ உலகம் கடந்து வந்தாய்
சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தினாய்
ஓசோனையும் தூய்மைப்படுத்தினாய்
விடுதியாய் நம்மிடம் வந்தாய்
வல்லோன் வலிமையை உணர வைத்தாய்
மறையை ஏந்த வைத்தாய்
கொரோனாவே நீ வென்று விட்டாய்.
ASMA MASAHIM
PANADURA
SEUSL
உன் நாமம் கேட்டு பயந்தோம் நாம் உனை அழிக்க பலவும் செய்தோம் நாம் ஆனால் நீயோ கைகோர்த்துக் கொண்டாய் நம்முடன் வாழ பழகிக் கொண்டாய் சமூக இடைவெளி பேண வைத்தாய் குடும்ப பாசத்தை புரிய…
உன் நாமம் கேட்டு பயந்தோம் நாம் உனை அழிக்க பலவும் செய்தோம் நாம் ஆனால் நீயோ கைகோர்த்துக் கொண்டாய் நம்முடன் வாழ பழகிக் கொண்டாய் சமூக இடைவெளி பேண வைத்தாய் குடும்ப பாசத்தை புரிய…