கோடாரிகள்
- by admin
- 17
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
விதைந்த நாள் தொட்டு
முளை விட்டு
கிளை விட்டு
வேராய் நிமிர்ந்த
தோப்பு இது
மரமாயினும்
மாறா குணமாய்
பட்சிகள் இனம் பாராது
இளைப்பார
இருக்கையாய் இருந்து
இருக்க அணைத்த
கைகளிது
ஒரே இனம் என்றறிந்தும்
தான் உருவாகிய
உதிரத்தை மறந்து
கற்ற பாடம் துறந்து
ஈரமற்ற மரக்கட்டைகள்
கோடாரிகள் எனும்
பெயர் தாங்கி
சிதைத்திட்டது
இத்தோப்பை
இன்றுவரை
கதிகலங்கி கண்ணீர்
வடிக்கிறது அடிபட்ட
அம்மரங்கள்
கோடாரிகளுக்கு வேலை
எதுவரை?
அம்மரங்களுக்கு தெரியும்
பின்னால் பிடித்திருக்கும்
விலை போகும் கைகள்
வீழும் வரை
அதுவரை பொறுமை
காக்கும்
இந்தத் தோப்பு…..
கவிச்சாரல் சாரா
புத்தளம்
விதைந்த நாள் தொட்டு முளை விட்டு கிளை விட்டு வேராய் நிமிர்ந்த தோப்பு இது மரமாயினும் மாறா குணமாய் பட்சிகள் இனம் பாராது இளைப்பார இருக்கையாய் இருந்து இருக்க அணைத்த கைகளிது …
விதைந்த நாள் தொட்டு முளை விட்டு கிளை விட்டு வேராய் நிமிர்ந்த தோப்பு இது மரமாயினும் மாறா குணமாய் பட்சிகள் இனம் பாராது இளைப்பார இருக்கையாய் இருந்து இருக்க அணைத்த கைகளிது …