சமூக மாற்றத்தில் பெண்களின் பங்களிப்பு
- by admin
- 88
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
சமூக மாற்றம் என்பது இஸ்லாம் காட்டித் தந்த முறைப்படி ஏற்படுமானால் அது உண்மையான மாற்றமாக இருக்கும். எனவே மாற்றம் முதலில் நம்மிடம் இருந்தே தொடங்கவேண்டும்.
எந்த சமூகம் தன் பண்புகளை மாற்றிக்கொள்ளவில்லையோ அந்த சமூகத்தை அல்லாஹ் மாற்றுவதில்லை (13:11)
இறையச்சமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதில் பெண்களின் பங்கு மிக அதிகமாக இருக்கிறது. சமூக மாற்றம் என்பது குடும்பங்களின் மாற்றமாகும். இதற்கு வித்திடுபவர்கள் இல்லத்து பெண்கள் ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பமே பல்கலைக்கழகம் போன்றதாகிவிடும். இன்று உலகத்தில் அரைவாசிக்கு மேல் பெண்களின் எண்ணிக்கையே காணப்படுகின்றன. இன்றைய உலகில் முஸ்லிம் பெண்களை இரண்டாக பிரித்து பார்க்கலாம்.
- மார்க்கத்தை பூரணமாக கற்று வீட்டிற்குள் கட்டுப்பாடுகளுடன் எந்த முயற்சிகளிலும் சமூகத்திற்குள் காலடி வைக்காமல் வீட்டிற்குள் அடைந்து காணப்படும் பெண்கள்.
- மார்க்கத்தை விளங்கியும் விளங்காமல் ஏனோ தானோ என்று மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு மேற்கு நாகரீகங்களை பின்பற்றும் முஸ்லிம் பெண்கள்.
எனவே இந்த இரு நிலைகளிலும் பெண்கள் வாழ்வது ஆபத்தானது ஏனெனில் சமூக மாற்றத்திற்கு பெண்களின் பங்கு அளப்பாரியது இன்றைய பெண்களைப் பார்த்தால் குழந்தையை பராமரிப்பதும் சமைப்பதும் தான் பணி என்று நினைத்து அதிலே முடங்கிக் கிடக்கிறார்கள். மார்க்க விடயங்களுக்காக பெண்களைக் காண்பது அரிது ஆனால் ஆரம்ப கால பெண்மணிகள் மார்க்கத்தை கற்றது மட்டுமில்லாமல் பிறருக்கும் கற்றுக் கொடுத்தார்கள்.
“உதாரணமாக குறிப்பிடலாம் அன்னை ஆயிஷா ரலி அவர்கள் பல போர்களில் பங்கு பற்றிய சாஹாபிப் பெண்மணிகள் தஃவா பிரச்சாரங்களில் பங்கு பற்றி இருக்கிறார்கள்.” இதில் ஒரு முக்கியமான விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். சூரா அஹ்ஷாபில் 33 ம் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
“நபியுடைய மனைவியரே நீங்கள் உங்கள் வீடுகளில் தங்கியிருக்கலாம்” என்று கூறியுள்ள வசனத்தை நாம் பார்த்தால் இதற்கு மாற்றமாக அவருடைய மனைவிமார் நடந்திருக்கிறார்கள் என்று தோன்றுமே.! தோன்றலாம் தப்பில்லை ஆனால் இந்தக் குர்ஆன் வசனம் எதை உணர்த்துகிறது என்றால் தேவைக்கு இல்லாமல் சீர்கேட்டில் செல்லாமல் வீட்டில் இருப்பதையே வலியுறுத்துகிறது.
நபி ஸல் அவர்களின் மனைவிமார்களே சமூக மாற்றத்திற்கு ஈடு பட்டார்கள் என்றால் ஏன் நம் பெண்களுக்கு முடியாது?
அந்த அடிப்படையில் சாஹாபிப் பெண்களின் வாழ்க்கையைப் பார்த்தால் சமூக முன்னேற்றத்துக்கு பெண்கள் கல்வி பயில்வது சேவை செய்வது அவசியம் என்பது தெளிவாகிறது. ஆனால் அது மார்க்க எல்லையை வேலியை தாண்டி செல்ல கூடாது. இஸ்லாம் காட்டித்தந்த வரையறைக்குள் கல்வி கற்று சேவை செய்ய வேண்டும். வெறுமனே கல்வி கற்று மாத்திரம் இருக்கக்கூடாது இன்று எம் சமூகத்தில் இருக்கின்ற பாரிய பின்னடைவு தான் மார்க்கத்தை கற்று அவர்களின் வாழ்க்கையை சீரமைப்பதில் மாத்திரமே இன்றைய பெண்கள் கரிசனை செலுத்துகின்றனர்.
இதனை இஸ்லாம் விரும்பவில்லை தான் மாத்திரம் இஸ்லாமிய நெறிமுறைகளில் வாழ வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை குடும்பம் ,சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பதையே உணர்த்துகிறது.
எனவே இஸ்லாம் பெண்களுக்கு கல்வி கற்பதை கடமையாக்கியுள்ளது சமூக மாற்றத்திற்கு பெண்களின் பங்கு முக்கியம் என்பதை உணர்ந்து இஸ்லாமிய வரையறைக்குள் இருந்து கல்வி கற்று ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கி சமூகத்தின் எழுச்சியை மிளிரச்செய்வோமாக..
Faslan Hashim
BA ®
South Eastern University of Sri Lanka
சமூக மாற்றம் என்பது இஸ்லாம் காட்டித் தந்த முறைப்படி ஏற்படுமானால் அது உண்மையான மாற்றமாக இருக்கும். எனவே மாற்றம் முதலில் நம்மிடம் இருந்தே தொடங்கவேண்டும். எந்த சமூகம் தன் பண்புகளை மாற்றிக்கொள்ளவில்லையோ அந்த சமூகத்தை…
சமூக மாற்றம் என்பது இஸ்லாம் காட்டித் தந்த முறைப்படி ஏற்படுமானால் அது உண்மையான மாற்றமாக இருக்கும். எனவே மாற்றம் முதலில் நம்மிடம் இருந்தே தொடங்கவேண்டும். எந்த சமூகம் தன் பண்புகளை மாற்றிக்கொள்ளவில்லையோ அந்த சமூகத்தை…