Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சென்னையில் எங்கெல்லாம் STRONG ROOM அமைக்கப்பட்டுள்ளது…! இந்த பக்கம் யாரும் போயிடாதீங்க..! முழு விவரம்… 

சென்னையில் எங்கெல்லாம் STRONG ROOM அமைக்கப்பட்டுள்ளது…! இந்த பக்கம் யாரும் போயிடாதீங்க..! முழு விவரம்…

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

சென்னையில் மூன்று இடங்களில் STRONG ROOM அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலின் நேற்றைய தினம் 21 மாநிலங்கள் உட்பட 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. இதில் தமிழத்தில் உள்ள 39 மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் நேரத்தில், வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், சில வாக்குச்சாவடிகளில் இரவு 7.30 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும், முகவர்கள் முன்னிலையில், பதிவான வாக்குகள், பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, அதன்பின், மின்னணு இயந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்தந்த தொகுதியில் பதிவான வாக்குகள் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக STRONG ROOM-ல் துப்பாக்கி இந்திய காவலர்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவம், உள்ளூர் போலீஸார், ஆயுதப் படையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் எங்கெல்லாம் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். அதன்படி சென்னையை பொறுத்தவரை தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை என மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. தென் சென்னைக்கு உட்பட்ட வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் அனைத்துமே அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அதே போல் மத்திய சென்னைக்கு உட்பட்ட வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் அனைத்துமே லயோலா கல்லூரியில் பாதுக்காப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் வட சென்னைக்கு உட்பட்ட வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் அனைத்துமே ராணிமேரி கல்லூரியில் பாதுக்காப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இந்த மூன்று இடங்களில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் பலத்த பாதுகாப்பு மத்தியில் STRONG ROOM-ல் வைக்கப்படுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு சரியாக 11 மணியளவில் தேர்தல் நடத்தும் அலுவலர், மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பார்வையிட்ட பிறகு சீல் வைக்கும் பனி நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

The post சென்னையில் எங்கெல்லாம் STRONG ROOM அமைக்கப்பட்டுள்ளது…! இந்த பக்கம் யாரும் போயிடாதீங்க..! முழு விவரம்… appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” சென்னையில் மூன்று இடங்களில் STRONG ROOM அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலின் நேற்றைய தினம் 21 மாநிலங்கள் உட்பட 102…

[[{“value”:” சென்னையில் மூன்று இடங்களில் STRONG ROOM அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலின் நேற்றைய தினம் 21 மாநிலங்கள் உட்பட 102…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *