ஞானசார தேரருக்கு ஏன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது?: இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அவர் என்ன பேசினார்?
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
[[{“value”:”
இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை இன்று (28) விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
என்ன நடந்தது?
கொழும்பு – கிருலப்பனையில் 2016 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் ஊடக சந்திப்பொன்றினை நடத்திய ஞானசார தேரர், வெறுப்பூட்டும் வகையில் பேசியதாகவும், அது நல்லிணக்கத்துக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.
அது தொடர்பில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர், ஞானசார தேரரின் பேச்சுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
அதற்கிணங்க – தண்டனை சட்டக் கோவையின் 291(அ) பிரிவின் கீழ் ஞானசாரதேரர் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்ததாக, சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
மேற்சொன்ன ஊடக சந்திப்பில் – பலாங்கொடை ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம் குறித்து பேசிய ஞானசார தேரர், கூரகல பெளத்த புராதன சின்னங்களை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதாகவும் கூறிய ஞானசார தேரர் – அல்லாஹ்வை கேவலமான வசனங்களைக் கொண்டு தூற்றும் விதமாகவும் கருத்து வெளியிட்டார்.
இதனை அடிப்படையாக வைத்தே, ஞானசார தேரருக்கு எதிராக மேல் நீதிமன்றில் – சட்ட மா அதிபரால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதோடு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இது தொடர்பில் எச்.சி.1948/20 எனும் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை சுமுகமாக முடித்துக்கொள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் முயற்சித்திருந்ததோடு, குறித்த ஊடக சந்திப்பில் தனது பேச்சு முஸ்லிம்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் அண்மையில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே அவருக்கு 04 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தொடர்பான செய்தி: இஸ்லாத்தை அவமதித்துப் பேசிய குற்றச்சாட்டு: ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு
“}]]Read More
[[{“value”:” இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை இன்று (28) விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு…
[[{“value”:” இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை இன்று (28) விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு…