Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 31 

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 31

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ராதா கல்லாய் நிற்க, சத்தம் கேட்டு வாணியும் ஹோலுக்கு வந்து சேர்ந்தாள்.

“என்னம்மா? என்ன நடக்குது இங்க?” வாணியின் வரவு கண்டு எல்லோரும் அமைதி காக்கவே, சுரேஷ் தான் வாயைத் திறந்தான்.

“அக்கா வந்தவங்களுக்கு உன்ன ரொம்பவே புடிச்சி இருக்காம்..

என்ன தம்பி சொல்ற?” அவளுக்கு எல்லாம் கனவு போல் இருந்தது.

“ஆமாம் அக்கா, உன்னோட சேர்த்து என்னயும் புடிச்சிட்டு போல, மாப்புள பொடியனோட தங்கச்சிய எனக்கு கலியாணம் பண்ணிக்க சொல்லுறாங்க, எனக்கு இதில் டபல் ஓகே..

என்னடா சொல்ற?” திகைத்துப் போனாள்.

“இது நடக்காது தம்பி, நான் நடக்க விடவும் மாட்டன்.

ஐயோ அக்கா நீ கொஞ்சம் பேசாம இருக்கியா?

அங்க வசீகரா உனக்காக இருக்காள்டா..

அது எல்லாம் பிரேக்கப் ஆவிட்டு அக்கா. உன்னோட லய்ப்காக இதக்கூட பண்ண மாட்டனா?

நீ என்ன சொன்னாலும் நான் சம்மதிக்க போறதில்ல..” தேம்பித் தேம்பி அழுதாள் வாணி.

“இப்போ எதுக்கு அழுவுற அக்கா? ஓஹ்! ஒரு வேள நான் உன் சொந்தத் தம்பியா இருந்தா இதுக்கெல்லாம் ஓகே பண்ணிருப்பாய்ல?

போதும் டா, போதும் பிளீஸ்.. எனக்குன்னு சொந்தமா ஒரு தம்பி அமைந்திருந்தாலும், என் மேல இந்தளவு அன்பு பாராட்டியிருக்க மாட்டான்டா. உன்ன நான் எப்பவுமே பிரிச்சி பார்க்கல்ல தம்பி, மனசுல ஒரு பொண்ண வெச்சிட்டு எப்படிடா இன்னொருத்தர் கூட வாழுவாய்? எனக்கு இது சரியாப் படல்ல தம்பி, கலியாணம்ன்றது சும்மா இல்லடா..

என் மனசுல இருந்த பொண்ணு நான் வேணாம்னு போனதும், என் அக்காவுக்காக, அவங்க சந்தோஷத்துக்காக இந்த கலியாணத்த பண்ணி கொள்றது எனக்கு சம்மதம் தான் அக்கா..

வசீகரா அப்படி உன்ன வேணாம் சொல்லிருக்க மாட்டாங்க தம்பி..

சொல்லிட்டாங்க அக்க” நடந்ததெல்லாம் ஒவ்வொன்றாய் சொல்லி முடித்தான். “இவள் நம்ம குடும்பத்துக்கு செட் ஆவ போறதும் இல்ல அக்கா, உன் மேல இவளுக்கு பெரிசா பிரியம் கிடையாது, இதனால என்ன உங்க எல்லோரயும் விட்டு தூரம் பண்ணிடுவாள்..

தம்பி…

பிளீஸ் அக்கா.. பிளீஸ்”

நீண்ட நேரம் அமைதி தொடரவே கண்ணீர் நிறைய இத் திருமணத்துக்கு அனுமதித்தாள் வாணி..

“ஹஹ் இது தான் என் அக்கா, இப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” அத்தனை சோகங்களையும் உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு தன் மூத்தவளின் வாழ்க்கை சிறக்க தன் வாழ்வையே அர்ப்பணிக்கத் தயாரானான் அருமைத் தம்பி..

வீட்டில் மீண்டும் ஆனந்தம் தலை காட்ட, கலியாண நடப்புக்கள் மெல்ல எழும்ப ஒவ்வொருவர் வாழ்வும் திசைமாறிய தீர்ப்புக்களாய், கடவுள் போட்ட முடிச்சின் பக்கம் வேறு கோணத்தில் பயணிக்கலாயிட்டு..

ராதா சுந்தர் வாழ்வில், இடையில் நுழைந்த வத்சலாவின் நிலைமையும், தன் மகனாய் சுரேஷைப் பார்த்த ராதாவின் தாய்மைக் குணமும், சொந்த தம்பியாய் பிணைந்திருந்த வாணி, சுரேஷின் சகோதரப் பாசமும், அனைத்துக்கும் மேலாக சுந்தரின் லீலைகளும் இறுதியில் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் ஒவ்வோர் அர்த்தங்களை கொடுத்திட்டு..

வாழ்க்கை நாம் நினைப்பதல்ல, கடவுள் செதுக்கியது. கடவுளின் விருப்பில் அனைத்தும் நகர, எந்த விடயத்தலும் பொறுமையை ஆயுதமாகக் கொண்டவர்கள் இறுதியில் வெற்றி காண்பர்…

கதை முற்றும்

(வாசகர்களின் பின்னூட்டங்களை எதிர்பார்க்கின்றேன்)

Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

ராதா கல்லாய் நிற்க, சத்தம் கேட்டு வாணியும் ஹோலுக்கு வந்து சேர்ந்தாள். “என்னம்மா? என்ன நடக்குது இங்க?” வாணியின் வரவு கண்டு எல்லோரும் அமைதி காக்கவே, சுரேஷ் தான் வாயைத் திறந்தான். “அக்கா வந்தவங்களுக்கு…

ராதா கல்லாய் நிற்க, சத்தம் கேட்டு வாணியும் ஹோலுக்கு வந்து சேர்ந்தாள். “என்னம்மா? என்ன நடக்குது இங்க?” வாணியின் வரவு கண்டு எல்லோரும் அமைதி காக்கவே, சுரேஷ் தான் வாயைத் திறந்தான். “அக்கா வந்தவங்களுக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *