நபிகளாரின் எதிர்வுகூறலும் பலஸ்தீனத்தின் மீள் எழுச்சியும்
- by admin
- 26
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எதிர்வுகூறிய பல்வேறு எழுச்சிச் செய்திகளில் பைத்துல் முகத்திஸ்ஸும் ஒன்றாகும். நபி (ஸல்)அலைஹிவஸல்லம் அவர்களது ஸுன்னாவின் முழுப் பரிமாணத்தயைும் முஸ்லிம் உம்மத் உள்வாங்குகின்ற அளவுக்கு அது விலாவாரியாக விளக்கப்படுவதில்லை. நபியவர்களது கூற்றுக்களில் மறுமையின் அடையாளங்கள், பித்னா என்னும் அந்திம கால குழப்ப நிலைகள், மண்ணறை நிகழ்வுகள், இபாதத்துக்கள் முதலானவை இக்கால தஃவாக் களத்தில் அழுத்தி பிரச்சாரம் செய்யப்படுகின்ற அளவுக்கு இஸ்லாத்தின் எதிர்கால எழுச்சி குறித்து வாழ்த்துச் செய்திகளும் சுபசோபனங்களும் முன்வைக்கப்படுவதில்லை. இதனால் முஸ்லிம் உம்மத் விரக்தி மனப்பான்மையையும் நிராசையையும் சுமந்து கொண்டு வாழுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதோடு இஸ்லாத்தை வாழச் செய்வதற்கான காத்திரமான பங்களிப்பை வழங்குகின்ற திராணியையும் இழந்து நிற்கின்ற தோற்றப்பாடு நிலவுகிறது. இதனை உடைத்து எரியுமுகமாகவே பலஸ்தீனப் போராட்டம் அமைந்துள்ளது.
நபி முஹம்மத் (ஸல்) அலை அவர்கள் கூறினார்கள். தற்போதைய பிரபஞ்ச அமைப்பு அனைத்தும் மாற்றமடைந்து மறுமை நாள் வரும்வரை ஒரு குழுவினர் இஸ்லாமிய வாழ்க்கை நெறியைப் பாதுகாக்கும் நோக்குடன் போராடிக் கொண்டிருப்பார்கள் என்றும் அக் குழுவினரின் போராட்டம் பிரதேசம் குத்ஸ் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எதிர்காலம் இஸ்லாத்திற்கே என்பதை சுட்டிக்காட்டுகின்ற பல்வேறு வலுவான சான்றுகள் உள்ளன.
“தொடர்ந்தும் இந்த சமுதாயத்தில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளைப்படி, நிகழக்கூடிய மறுமைவரை சத்திய மார்க்கத்தில் இருப்பார்கள். அவர்களுக்குத் துரோகம் இழைப்பதனால் எத்தகைய தீங்கும் ஏற்படுவதில்லை (ஸஹீஹுல் புகாரி)
இக் குழுவினரின் உண்மை நிலை பற்றி பல்வேறு அறிஞர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இமாம் நவவி ரஹ்மதுல்லாஹ் அவர்களது கருத்து மிகவும் பொருத்தமானதாகும். அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற போராளிகள், சட்டக்கலை வல்லுநர்கள், ஹதீஸ்கலை நிபுணர்கள் உலகில் பற்றற்று வாழுகின்ற ஸாலிஹான மனிதர்கள், நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கின்றவர்கள், ஏனைய நற்பணி புரிகின்ற மனிதர்கள் உள்ளிட்ட முஃமின்களை உள்ளடக்கிய குழுவினர் இவர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ வேண்டுமென்பது அவசியமில்லை. அவர்கள் பல்வேறு இடங்களில் பரவலாக வாழ முடியும். பொதுவாக ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ள ஒரு குழுவினர் என்ற சொற்பிரயோகம் போராளிகளைத் தான் குறிக்கின்றது. அல்லாஹுத்தஆலா தனது இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறியைப் பாதுகாப்பதற்கான போராட்ட ஒழுங்குகளை இவ்வுலகில் தொடர்ந்தும் பேணி வருகின்றான். இஸ்லாம் போராட்டத்தின் ஊடாக வளர்ந்த வாழ்க்கை நெறி. இதனைப் பாதுகாப்பதற்கான போராட்டக் குழுக்கள் மறுமை வரை தொடர்ந்தும் இருக்கும் இவற்றின் பிரதான இருப்பிடமாக சிரியாவின் தலைநகரான டமஸ்கஸ்ஸூம், பைத்துல் முகத்தஸ்ஸும் அமையும். இக்குழுக்கள் தங்களது போராட்டத்தில் இஸ்லாமிய சிந்தனையின் இருப்பை பாதுகாத்துக் கொள்வதை இறுதி இலக்காகக் கொண்டிருக்கும்.
அறுபது வருடகால யூத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுகின்ற சத்தியக் குழுவை அழித்தொழிப்பதற்கான நயவஞ்சகத்தனமான எத்தனங்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. பலஸ்தீனப் போராட்டக் குழுக்களை யூத-ஸியோனிச மூளைகள் துண்டாடின. சமரசப் பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கைகள், பேரம் பேசல்கள் நடைபெற்றன. முஸ்லிம் முகமூடி ஒன்றைக் கொண்டு வந்து பலஸ்தீனத்தின் ஜனாதிபதியாக ஸியோனிசவாதிகள் நியமித்தனர். தமது கைப் பொம்மைகளுக்கு பணத்தை வாரி வாரி இறைத்தனர். சத்திய மார்க்கத்திற்காக போராடுகின்ற குழுவின் நிர்வாக இயந்திரத்தை செயலிழக்கச் செய்வதற்காக பொருளாதாரத் தடையை விதித்தனர். பொதுமக்களை சத்தியக் குழுவுக்கு எதிராகத் தூண்டிவிடுகின்ற ராஜதந்திர நடவடிக்கைகளை யூதர்கள் முன்னெடுத்தனர். பலஸ்தீன விடுதலைக்காகப் போராடிய முன்னோடிகளை மற்றும் ஆன்மீகத் தலைவர்களை கொன்று குவித்தனர். பலஸ்தீன மண்ணை இருகூறாக்கி பிரிசுவர் எழுப்பினர். அத்தனை துரோகங்களும் சத்தியத்திற்காகப் போராடுகின்ற குழுவை போராட்டப் பாதையை விட்டும் சறுக்கச் செய்யவில்லை.
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உம்மத்தில் தொடர்ந்து போராடுகின்ற இக்குழுவினர் தங்களது முதல் தர எதிரியாக யூதர்களைக் காண்பார்கள். இஸ்லாமிய எழுச்சிப் பேரலையைத் தடுத்து நிறுத்துகின்ற ஜென்ம விரோதியாகிய யூதர்களை அழிப்பது இக்குழுவின் முதன்மையான பணியாக அமையும். யூதர்கள் அழிக்கப்பட்டு அவர்களது ராஜ்யமும் தகர்க்கப்பட்டு ஒரு கிலாபத் உருவாகும். அந்த கிலாபத்தின்போது இந்த உலகம் பூலோக சுவனமாக அமைதிப் பூங்காவாக காட்சி தரும். அதன் பின்னரே மறுமை உருவாகும்.
யூத சக்திகளோடு களச் சமர் புரிகின்ற கர்ம வீரர்களாக முஸ்லிம்கள் இருப்பார்கள் என்றும்; அப்போது இந்த இயற்கைகூட முஸ்லிம்களுக்கு சார்பாக நிற்கும் என்றும் நபி முஹம்மத் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
“முஸ்லிம்கள் யூதர்களுடன் போராட்டத்தில் ஈடுபடும் வரை மறுமை நாள் தோன்ற மாட்டாது. முஸ்லிம்கள் யூதர்களை கொன்று குவிப்பார்கள். எந்தளவுக்கு என்றால் ஒரு யூதன் கற்களின் பின்னாலும், மரங்களின் பின்னாலும் ஓடி ஔிந்து மறைந்து கொள்வான். அப்போது மரங்களும் கற்களும் “முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியானே! இதோ ஒரு யூதன் என் பின்னால் ஔிந்திருக்கிறான். இங்கே வந்து அவனைக் கொன்றுவிடு” என்று கூறும் “அர்கத்” என்னும் மரத்தைத் தவிர, ஏனெனில் இது யூதர்களின் மரம்” (முஸ்லிம்)
இந்த சுப செய்தியில் பொதிந்துள்ள நிதர்சனமான உண்மைகளை இந்த நூற்றாண்டில் நாம் பிரத்தியட்சமாகக் கண்டு வருகின்றோம். முஸ்லிம்களின் புனித பூமியான பலஸ்தீனையும் புனிதத் தலமான மஸ்ஜிதுல் அக்ஸாவையும் அறுபது வருடகாலமாக ஆக்கிரமித்து, முஸ்லிம்களை கொன்று குவிக்கின்ற, பொருளாதாரத் தடை விதித்து பலஸ்தீன முஸ்லிம்கள் உயிர்களை காவு கொள்கின்ற இந்த நூற்றாண்டின் முதல் தர பயங்கரவாதிகளாகிய ஸியோனிசவாதிகளுக்கு எதிராகப் போராடுகின்ற பலஸ்தீன் விடுதலைப் போராட்ட குழுக்களையும் பலஸ்தீன் மக்களையும் நாம் அவதானிக்கும் போது நபிகளாரின் சுப செய்தி சுமந்து வருகின்ற நம்பிக்கை தரும் மாற்றங்கள் வெகுதொலைவில் இல்லை என்பது நிச்சயம். அவ்வாறே இஸ்ரவேலர்கள் தமது தலைநகரான டெல் அவிவ் பகுதியில் “அர்கத்” என்னும் மரங்களை வளர்த்து வருகின்றமை நபிகளாரின் எதிர்வுகூறலில் உள்ள நம்பகத்தன்மையை யூதர்கள் ஆழமாக விசுவாசித்துள்ளார்கள் என்பதையே நமக்கு தெளிவுபடுத்துகின்றன.
இந்த உம்மத்தின் தேகத்திலிருந்து சொட்டுகின்ற செந்நீர் கண்டு நாம் விரக்தியின் விளிம்புக்கே சென்றுவிட முடியாது.ரணங்களும் சிதைவுகளும் சேதங்களும் இழப்புக்களும் இஸ்லாத்தின் மீள் எழுச்சிக்கான அத்திபாரங்கள் என்பதை நாம் மறந்திட முடியாது…..புதைத்தாலும் முளைப்போம் இன்ஷா அல்லாஹ்
Afra binth Ansar
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எதிர்வுகூறிய பல்வேறு எழுச்சிச் செய்திகளில் பைத்துல் முகத்திஸ்ஸும் ஒன்றாகும். நபி (ஸல்)அலைஹிவஸல்லம் அவர்களது ஸுன்னாவின் முழுப் பரிமாணத்தயைும் முஸ்லிம் உம்மத் உள்வாங்குகின்ற அளவுக்கு அது விலாவாரியாக விளக்கப்படுவதில்லை.…
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எதிர்வுகூறிய பல்வேறு எழுச்சிச் செய்திகளில் பைத்துல் முகத்திஸ்ஸும் ஒன்றாகும். நபி (ஸல்)அலைஹிவஸல்லம் அவர்களது ஸுன்னாவின் முழுப் பரிமாணத்தயைும் முஸ்லிம் உம்மத் உள்வாங்குகின்ற அளவுக்கு அது விலாவாரியாக விளக்கப்படுவதில்லை.…