நித்யா… அத்தியாயம் -17

  • 7

”ம்….. அப்டியானா உண்மய சொல்லிடு…. அவசரமா? ” மிரட்டும் குரலில் கத்தியவுடன்,

”சரி… நா சொல்லிடறன். என்ன ஒன்னும் பண்ணிடாதீங்க?” குழப்பத்துடன் கூறியதும் ,

”ம்…ம்….”

”அதுவந்து நித்யாங்குறது ரொம்ப நல்ல பொண்ணு சார்… நா கேட்டதுமே அவ தங்கச்சயே கல்யாணம் பண்ணி கொடுத்தவ அவதா…. நா…. எப்படி போய்… அவவ கொல்லுறது?”

”ஓஹோ… என்ன பொய் சொல்லி தப்பிக்க பாக்றியா?”

”இல்லீங்க…. நா உண்மய தா சொல்றது…. ஆனா ஒரு விஷயம்….” அவன் அந்த நெடியவனை அருகே அழைத்து ஏதோ இரகசியம் கூறினான்.

”ஹ்ம்…. இந்த விஷயமா? எனக்கு முன்னாடியே அவன் மேலயும் டௌட் தா…. ஆனா நீ சொல்லு நீ எப்படி இதுல சம்பந்தப்பட்ட? ”

மீண்டும் அதே கேள்வியால் முகத்திலிருந்த வியர்வைத்துளிகள் அதிகரித்தன.

”ம்…ம்…. சொல்லு? ” அவனையே ஒருகணம் பார்த்துவிட்டு,

”அது….அது…. ஒரு தற்செயலாக நடந்துச்சி…..”

”மேல சொல்லு..”

கார்த்திக் ஒவ்வொறு சம்பவங்களாகக் கூறக்கூற அந்த நெடியவன் நெடிய நெடிய மூச்சுக்களை விட்டு,

”போதும் நிறுத்து…..” கையசைத்துக் கத்தினான்.

”சீ….. ஒன்னயெல்லாம் போய் நம்பியிருக்காளே அவ….” குரலில் வருத்தம் தொனித்தது.

”ஒன்னயெல்லாம் போலீஸ்ட தா புடிச்சி குடுக்கணும்…”

ஆக்ரோஷமாகக் கத்தியவனை பார்க்கவே பயந்தான். சற்று நேரத்தில் அந்த நெடியவன் முகமூடியை கழற்றியதுமே கார்த்திக்கின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

”ம்….. அப்டியானா உண்மய சொல்லிடு…. அவசரமா? ” மிரட்டும் குரலில் கத்தியவுடன், ”சரி… நா சொல்லிடறன். என்ன ஒன்னும் பண்ணிடாதீங்க?” குழப்பத்துடன் கூறியதும் , ”ம்…ம்….” ”அதுவந்து நித்யாங்குறது ரொம்ப நல்ல பொண்ணு சார்……

”ம்….. அப்டியானா உண்மய சொல்லிடு…. அவசரமா? ” மிரட்டும் குரலில் கத்தியவுடன், ”சரி… நா சொல்லிடறன். என்ன ஒன்னும் பண்ணிடாதீங்க?” குழப்பத்துடன் கூறியதும் , ”ம்…ம்….” ”அதுவந்து நித்யாங்குறது ரொம்ப நல்ல பொண்ணு சார்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *