நீயே என் காதல்
- by admin
- 43
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
மரணித்த மனதை உயிர்ப்பித்த உனது விழிகள்
ஏன் மீண்டும் என்னை உயிரோடு புதைக்கின்றன
உயிரற்ற உடலாய் எனது காதல் நீயற்றுத் தவிக்கிறது
நீரற்ற மீனாய் என்னை தரையிலிட்டு வேடிக்கை பார்க்கிறாய் நீ
வேதனை செய்யாத உனது விழிகள்
ஏன் சாதனை புரிகிறது என்னிடத்தில்
மௌனம் கொண்டு உன்னை நேசித்ததில் இருந்து
உயிர் உப்புக்காற்றைக்கூட சுவாசம் கொள்கின்றது
உனது மூச்சும் அதில் கலந்திருக்க்கூடும் என்று
நட்சத்திர வானமோ எச்சில் துப்புகிறது
நெஞ்சில் மிதிப்பவள் பாதத்தையே
நெஞ்சில் சுமக்கும் உன் மனதிற்கு
நஞ்சாய் என் இரவுகள் இருக்கின்றதே
என்று தனக்குத்தானே கருப்பொருளாக
என் காதல் இருக்கவே
கண்ணீர்த் துளிகளால்தான் முற்றுப்பெறுகிறது
என் கவிதை வரிகள்
ஐ.எம்.அஸ்கி
கவியிதழ் காதலன்
அட்டாளைச்சேனை -08
மரணித்த மனதை உயிர்ப்பித்த உனது விழிகள் ஏன் மீண்டும் என்னை உயிரோடு புதைக்கின்றன உயிரற்ற உடலாய் எனது காதல் நீயற்றுத் தவிக்கிறது நீரற்ற மீனாய் என்னை தரையிலிட்டு வேடிக்கை பார்க்கிறாய் நீ வேதனை செய்யாத…
மரணித்த மனதை உயிர்ப்பித்த உனது விழிகள் ஏன் மீண்டும் என்னை உயிரோடு புதைக்கின்றன உயிரற்ற உடலாய் எனது காதல் நீயற்றுத் தவிக்கிறது நீரற்ற மீனாய் என்னை தரையிலிட்டு வேடிக்கை பார்க்கிறாய் நீ வேதனை செய்யாத…