பகலை பிறசவிக்கும் இரவு
- by admin
- 11
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
இரவுகள் ஏனோ
ஈசலின் ஆயுள் போல
தொடங்கியதும் முடிகிறது
பகல்கள் மட்டும் எங்கு சென்றாலும்
கூடவே வரும் நிழலைப் போல
விடாமல் துரத்துகிறது
விடிந்ததும் இயந்திர உலகில்
கால் பதித்து நிமிரவும் முடியாமல்
குனியவும் முடியாமல் மல்லாக்க
சாயந்த மரக்கட்டைகளாக நீந்துகிறது
புளுக்கம் நிறைந்த பொழுதுகளில்
உள்ளெங்கும் புகைவிட்டு ஆத்தும்
முதியோனைப் போலவே நினைவலைகள்
இரவை நனைக்கிறது
நட்சத்திரங்கள் அற்ற பகல்களில்
நடந்து திரியும் மேகங்களும்
சூனியம் செய்துகொண்டே
வானில் தொங்கும்
சில நேரங்களில்
தென்னை ஓலை மறைவில்
தூரமாய் தூசிபடிந்த சூரியனின்
துண்டொன்றும் தெரியலாம்
குளிர் காலங்களில்
முதற் துளி பட்டதும்
சிலிர்தெழும் மேனிபோல
சிக்கெடுக்கும் இளசுகளின்
கூச்சலில் சிலிர்த்துக்கொண்டெழுகிறது
வெயிலின் கொடூரம்
நாளையும்
புதிய பரிமாணம் கொண்டு
மீண்டும் ரணமான ஒரு பகலை
வழமை போல் நீயம் புவியில்
பிறசவிப்பாய் இரவே!
முனையூரான்
சப்னாத்
இரவுகள் ஏனோ ஈசலின் ஆயுள் போல தொடங்கியதும் முடிகிறது பகல்கள் மட்டும் எங்கு சென்றாலும் கூடவே வரும் நிழலைப் போல விடாமல் துரத்துகிறது விடிந்ததும் இயந்திர உலகில் கால் பதித்து நிமிரவும் முடியாமல் குனியவும்…
இரவுகள் ஏனோ ஈசலின் ஆயுள் போல தொடங்கியதும் முடிகிறது பகல்கள் மட்டும் எங்கு சென்றாலும் கூடவே வரும் நிழலைப் போல விடாமல் துரத்துகிறது விடிந்ததும் இயந்திர உலகில் கால் பதித்து நிமிரவும் முடியாமல் குனியவும்…