Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
படகொன்று கவிழ்ந்ததே 

படகொன்று கவிழ்ந்ததே

  • 14

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

படகொன்று கவிழ்ந்ததே
பரிதாபம் நிறைந்ததே
அழகான உயிர்கள் சேர்ந்து
அல்லாஹ் அழைப்புக்குள் நுழைந்ததே

தண்ணீரும் தவித்ததே
கண்ணீரும் கொதித்ததே
விடிகாலைப் பொழுதும் அன்று
இடியாக இடித்ததே

செவியுற்றோர் இதயமெல்லாம்
இரும்பாகக் கனத்ததே
பிஞ்சுயிர்கள் கண்மறைந்தே
நெஞ்சமெல்லாம் துயர் நிறைந்ததே

தன்உறவு தொலைத்த சொந்தங்கள்
சோகத்தில் நிலைத்ததே
உலகத்தின் நிலையாமை
காட்சிகளாய் நிலைத்ததே

தாயன்பின் அடையாளம்
மரணத்திலும் வழுத்ததே
இதயத்தின் திசுக்களெல்லாம்
ஓயாமல் வலித்ததே

விழியிரண்டில் கண்ணீரும்
கடலெனவே வழிந்ததே

இறைவிதியை ஏற்பதற்கு பலம் கேட்டு
மனம் பிரார்த்தனை புரியுதே
இன்னுயிர் நீத்த உறவுகளுக்காய்
சுவனத்தை கேட்டிங்கே
கரங்களெல்லாம் உயருதே

மக்கொனையூராள்

படகொன்று கவிழ்ந்ததே பரிதாபம் நிறைந்ததே அழகான உயிர்கள் சேர்ந்து அல்லாஹ் அழைப்புக்குள் நுழைந்ததே தண்ணீரும் தவித்ததே கண்ணீரும் கொதித்ததே விடிகாலைப் பொழுதும் அன்று இடியாக இடித்ததே செவியுற்றோர் இதயமெல்லாம் இரும்பாகக் கனத்ததே பிஞ்சுயிர்கள் கண்மறைந்தே…

படகொன்று கவிழ்ந்ததே பரிதாபம் நிறைந்ததே அழகான உயிர்கள் சேர்ந்து அல்லாஹ் அழைப்புக்குள் நுழைந்ததே தண்ணீரும் தவித்ததே கண்ணீரும் கொதித்ததே விடிகாலைப் பொழுதும் அன்று இடியாக இடித்ததே செவியுற்றோர் இதயமெல்லாம் இரும்பாகக் கனத்ததே பிஞ்சுயிர்கள் கண்மறைந்தே…