பணிவுடன் வாழ்ந்த மாநபி!
- by admin
- 19
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
“தனியாதுல் விதா” எனும்
மக்காவில் பிறந்து
இறைவனின் தூதராய்
இறுதி நபியாய்
இறைவனுக்கு
மட்டுமே திருப்தியளிக்கும்
இஹ்லாஸ் எனும் பண்பினை
சொல்லிலும் செயலிலும்
மெய்ப்பித்து வாழ்ந்தவர்!
பெருமை கொள்ள வேண்டியவர்!
நம்பிக்கையாளராக
அல்லாஹ்வின் அடிமையாக
பணிவோடு வாழ்ந்தாரே
எங்கள் மாநபி!
மறுமை வரை வாழும் முஃமீன்கள்
தக்வாவுடன் வாழ
தக்வாவை கற்றுத் தந்தவர்!
பெருமை கொள்ள வேண்டியவர்!
இறைநேசராக உண்மையாளராக
பணிவோடு வாழ்ந்தாரே
எங்கள் மாநபி!
கண்களின் சைகை போதும்
காரியத்தை கச்சிதமாக முடிக்கும்
கண்ணியமான ஸஹாபாக்களை
சூழப்பெற்றவர்!
படையெடுப்புகள் வெற்றியில் முடிந்தாலும்
வெற்றிக்கு மேல் வெற்றி குவிந்தாலும்
அட்டகாசமில்லாமல் அடக்குமுறையில்
இறங்காமல்
எதிரியாயினும் மன்னித்து
அடிமையை விடுவித்து
இஸ்லாம் வாளால்
வளர்க்கப்பட்ட மார்க்கமல்ல
நீதி நெறியால்
வென்றெடுக்கப்பட்ட மார்க்கமென
உலகிற்கு உணர்த்தியவர்!
பெருமை கொள்ள வேண்டியவர்!
இரக்க சிந்தை உள்ளவராய்
சகிப்புத்தன்மை வாய்ந்தவராய்
பணிவோடு வாழ்ந்தாரே
எங்கள் மாநபி!
சுலைமான் நபியைப் போல
அரசனாய் ஆட்சியாளனாய்
வாழ்வதற்கு விரும்பினால்
அதைத் தருவதாக
அல்லாஹ் வாக்களித்தும்
அல்லாஹ்வின் அடிமையாய்
வாழ்வதையே தேர்ந்தெடுத்தவர்!
கனீமத்தாய் சொத்துக்கள் சேர்ந்தாலும்
காற்றைப் போல் வேகமாய்
தர்மம் செய்தவர்!
பெருமை கொள்ள வேண்டியவர்!
வள்ளலாய் பொறுமையாளராய்
பணிவோடு வாழ்ந்தாரே
எங்கள் மாநபி!
வஹியை எத்தி வைத்து
வஹியை வாழ்வாக்கி
வஹியின் வாழ்வை வாழ்ந்து காட்டி
அழகிய முன்மாதிரியென
அல்லாஹ்வினால் வர்ணிக்கப்பட்டவர்!
பெருமை கொள்ள வேண்டியவர்!
உன்னத உதாரண சீலராய் திகழ்ந்து
பணிவோடு வாழ்ந்தாரே
எங்கள் மாநபி!
வீரர்களுக்கெல்லாம் வீரர்!
குணசீலர்களுக்கெல்லாம் தலைவர்!
தக்வாதாரிகளுக்கு வழிகாட்டி அவர்!
அரை வயிறு உண்டாலும்
வாரி வாரி வழங்கிய வள்ளல் அவர்!
மனைவிமார்களுக்கு சிறந்த கணவன்!
குழந்தைகளுக்கு சிறந்த தந்தை!
ஸஹாபாக்களுக்கு
கண்ணியமான தோழர் அவர்!
சுவனத்தின் வாயிலில் முதலில் நுழைபவர்!
மறுமையில் ஷபாஅத்துக்கு உரியவர்!
தன் உம்மத்துக்காக
அவர்களின் மீட்சிக்காக
மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால்
சுஜூதில் வீழ்ப்பவர் அவர்!
பெருமை கொள்ள வேண்டியவர்!
நீதி நெறி தவறாதவராய் இறைத்தூதராய்
பணிவோடு வாழ்ந்தாரே
எங்கள் மாநபி!
Nifra Nijam
Daluwakotuwa,
Kochchikade,
Negombo.
“தனியாதுல் விதா” எனும் மக்காவில் பிறந்து இறைவனின் தூதராய் இறுதி நபியாய் இறைவனுக்கு மட்டுமே திருப்தியளிக்கும் இஹ்லாஸ் எனும் பண்பினை சொல்லிலும் செயலிலும் மெய்ப்பித்து வாழ்ந்தவர்! பெருமை கொள்ள வேண்டியவர்! நம்பிக்கையாளராக அல்லாஹ்வின் அடிமையாக…
“தனியாதுல் விதா” எனும் மக்காவில் பிறந்து இறைவனின் தூதராய் இறுதி நபியாய் இறைவனுக்கு மட்டுமே திருப்தியளிக்கும் இஹ்லாஸ் எனும் பண்பினை சொல்லிலும் செயலிலும் மெய்ப்பித்து வாழ்ந்தவர்! பெருமை கொள்ள வேண்டியவர்! நம்பிக்கையாளராக அல்லாஹ்வின் அடிமையாக…