பல்கலைக்கழக மாணவர்களின் நிலை
- by admin
- 11
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
இன மொழி பேதம்
இதை எல்லாம் கடந்து
ஒன்று சேரும் இடம் தான்
பல்கலைக்கழகம்
பலதிசைகளிலிருந்து ஒரு
இடம் நோக்கி வந்த
பறவை கூட்டம்
மாணவ பட்டாளம்
சரித்திரம் படைக்க
காத்திருக்கும் இளையோர்
இன்று பல்கலைக்கழகத்தில்
ஏதுமின்றி நடைப்பிணமாக
நடமாடுகிறார்கள்
உயர உயரப் பறக்க
இறக்கை கொடுத்தால்
உயர்வு தேவையில்லை
கால் போன போக்கில்
நடக்கலாம் என்கிறார்கள்
சமூகத்தில் மாற்றத்தை கொண்டு
வருவார்கள் என்று நினைத்தால்
அவர்களின் நடத்தையிலும்
மாற்றத்தை காண
முடியாது உள்ளது
பல்கலைக்கழகம் எனறால்
பல்கலைகள் பயின்ற
மாணவர்கள் உண்டு
அது அன்று
ஆனால்
கூத்துக் கும்மாலம் தான்
வாழ்க்கையென வாழும்
மாணவர்கள் இன்று
ஒரு சமுதாயத்தின்
எதிர்காலமே!
மாணவர் சமுதாயத்தில்
தான் உள்ளது
ஆனால்
அந்த சமூகமே
எதிர்காலம்
இல்லாத நிலை இன்று
பட்டம் பெற்றுவிட்டால்
எல்லாம் முடிந்துவிட்டதென
நினைக்கும் மாணவர்கள்
வாங்கிய பட்டத்தை வைத்து
என்ன சாதிக்கப் போகிறார்கள்
என்பது கேள்விக்குரிதான்?
ஆனால்
வாங்கிய பட்டத்தை வைத்து
போராட்டம் மட்டும்
அங்கங்கே அரங்கேரும்
மாணவர் சமூகமே!!!
இன்று சிதறிக்கிடக்கும்
சில்லரையாய் மாறிவிட்டது
ஏன்???
இந்து அபலம்
மாணவர் சமுதாயமே
எத்தனை காலம் தான்
இவ்வாறு இருக்க
மாற்றம் வேண்டும்
ஒவ்வொரு பட்டதாரியின்
வாழ்க்கையிலும்!
நீங்கள் மாறினால்
முழு உலகமே
மாறிவிடும்
மாற்றம் முதலில்
உங்களிடம் இருந்தே
வர வேண்டும்.
Nushra Aadam.
Akurana.
South eastern university of Sri Lanka.
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்
இன மொழி பேதம் இதை எல்லாம் கடந்து ஒன்று சேரும் இடம் தான் பல்கலைக்கழகம் பலதிசைகளிலிருந்து ஒரு இடம் நோக்கி வந்த பறவை கூட்டம் மாணவ பட்டாளம் சரித்திரம் படைக்க காத்திருக்கும் இளையோர் இன்று…
இன மொழி பேதம் இதை எல்லாம் கடந்து ஒன்று சேரும் இடம் தான் பல்கலைக்கழகம் பலதிசைகளிலிருந்து ஒரு இடம் நோக்கி வந்த பறவை கூட்டம் மாணவ பட்டாளம் சரித்திரம் படைக்க காத்திருக்கும் இளையோர் இன்று…