பார்வை ஒன்றே போதும்
- by admin
- 24
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
பாரிலே எம்மை
பக்குவமாய்ப் படைத்து
பார்ப்போர் தன்
பார்வை குளிர்ந்திடச்
செய்த
என் றப்பே
உக்கிப்போய்
மக்கிவிடாது எம்
உண்டிகளுக்கு தினமும்
மணமாய்
உணவளிக்கும்
என் றப்பே
சிக்கலின்றிச்
சிரம்மின்றி
சிதறிடாமல் திணறிடாமல்
சிறப்பாய் சீராய்
சுவாசமளிக்கும்
என் ரஹ்மானே
துக்கமின்றித்
துயரமின்றி தினம்
தூயவழி வாழ்ந்திட
தூது கொண்டு வழிகள்
தூவி விட்ட
என் ரஹ்மானே
பார்த்து செய்த
பாராது செய்த
பாவங்கள்
அறிந்து செய்த
அறியாது செய்த
தவறுகள்
விரும்பிச் செய்த
விரும்பாது செய்த
பிழைகள்
கூடிச் செய்த
கூடாமல் செய்த
பாவக் கறைகள்
அத்தனையும் அப்படியே
அடியோடு அழகாய்
நொடிப் பொழுதில்
பொடியாக்கும்
என் தவ்வாபே
நின்னையொரு வரம் கேட்பேன்
நேரே அன்றெனக்கு
தருவாய் யா றப்
நிலவு போன்று
நின் முகம் தெரியும்
அந் நாளில்
நிலாக் காயும்
சிறு பிள்ளையாய்
சுவனமதில் தடைகளின்றி
நின் முகம் காண்
நிஜமொன்றே போதும்!
அந் நொடி ஒற்றை நொடியில்
நின்னை நோக்கிய
பார்வை ஒன்றே போதும்
ஷீபா இப்றாஹீம் (ஹுதாஇய்யாஹ்)
B.A (Hons) Ⓡ SEUSL
Psychological Counsellor Ⓡ
Maruthamunai.
பாரிலே எம்மை பக்குவமாய்ப் படைத்து பார்ப்போர் தன் பார்வை குளிர்ந்திடச் செய்த என் றப்பே உக்கிப்போய் மக்கிவிடாது எம் உண்டிகளுக்கு தினமும் மணமாய் உணவளிக்கும் என் றப்பே சிக்கலின்றிச் சிரம்மின்றி சிதறிடாமல் திணறிடாமல் சிறப்பாய்…
பாரிலே எம்மை பக்குவமாய்ப் படைத்து பார்ப்போர் தன் பார்வை குளிர்ந்திடச் செய்த என் றப்பே உக்கிப்போய் மக்கிவிடாது எம் உண்டிகளுக்கு தினமும் மணமாய் உணவளிக்கும் என் றப்பே சிக்கலின்றிச் சிரம்மின்றி சிதறிடாமல் திணறிடாமல் சிறப்பாய்…