Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பிரியாவிடை 

பிரியாவிடை

  • 30

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நானும் எட்டிப்பார்கிறேன்

பின்புறமாய்  நம் நினைவலைகளை

பிரியாவிடைத் தருணம்

என் மனசும் பித்துப்பிடித்துவிட்டது

பிரிவுத்துயரொன்று

எம்மையும் நாடத்துடிப்பதால்

முதல் நாள் முற்று முழுதும் புதுஉலகம்

மனே என்று அழைக்கையிலே

ஒரு மண்ணும் வெளங்காமல்

திக்காடிய திகில் தருணம்

ஒரியன்டேஷனில் ஓரிருவருடன் பழகி

சிரிப்பையெல்லாம் பகிர்ந்து

கொஞ்சம் பேரின் நட்பை

எப்படியோ சம்பாதித்துக்கொண்டு

ரூம்மெட்ஸாய் ஓர்அறையில்

ஒருவருக்கொருவர் உயிராய்

இருந்து அழகான வாழ்க்கையொன்றை

எப்படியோ ஆரம்பித்தோம்

ஹொஸ்டல் சாப்பாட்டில் புழு துடிக்க

அதைக்கண்ட நண்பி கதற

மோனிங் உடன் இங்கிலிஷ் இருக்க

வாழ்கையெல்லாம் வெறுத்துப்போக

விடுமுறைக்காய் காத்திருப்போம்

வீட்டடியே நிம்மதியாய் தூங்க

நாட்கள் செல்லச்செல்ல

நட்புகள் கூடிச்செல்ல

நந்தவனமொன்று கிடைத்தாற்போல

நட்பால் ஜொலிக்க ஆரம்பித்தோம்

மாங்காயும் உப்பும்

நண்பியின் மண்சட்டிக்கறியும்

நாட்களை மெருகூட்டின

பேத்டே பாட்டியும்

பியுட்டி டிப்ஸ்களும்

நம்மை துரத்திவந்தன

ஜீனியஸை முறைத்துப்பார்த்தல்

பின்நேரம் சிநேகம் கொள்ளல்

கண்டீனின் பிளேன்டி

அடுக்கடுக்காய் போடும் பாட்டு

நம்மை

உசார் படுத்திக் கொண்டேயிருக்கின்றன

பிரஷன்டேஷனில் தூங்கிஎழும்பல்

பிரக்வெஸ்ட்காய் ஏங்கித்துடித்தல்

பிட் அடித்து எங்சாம் எழுதல்

புfல்பfன் ஆய் காலம் நகர்த்தல்

ஆயிரம் தாண்டியிங்கு

நினைவலைகள் சேர்த்தியிருக்க

அடுத்தாண்டுக்குமுன்

நாமும் பிரியவேண்டுமென்பது

எனக்கு பைத்தியம் பிடிக்குமளவு

இப்போதே வலிக்கிது…

Binth Ameen

SEUSL

வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

நானும் எட்டிப்பார்கிறேன் பின்புறமாய்  நம் நினைவலைகளை பிரியாவிடைத் தருணம் என் மனசும் பித்துப்பிடித்துவிட்டது பிரிவுத்துயரொன்று எம்மையும் நாடத்துடிப்பதால் முதல் நாள் முற்று முழுதும் புதுஉலகம் மனே என்று அழைக்கையிலே ஒரு மண்ணும் வெளங்காமல் திக்காடிய…

நானும் எட்டிப்பார்கிறேன் பின்புறமாய்  நம் நினைவலைகளை பிரியாவிடைத் தருணம் என் மனசும் பித்துப்பிடித்துவிட்டது பிரிவுத்துயரொன்று எம்மையும் நாடத்துடிப்பதால் முதல் நாள் முற்று முழுதும் புதுஉலகம் மனே என்று அழைக்கையிலே ஒரு மண்ணும் வெளங்காமல் திக்காடிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *