Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
புன்னகை வேலி 

புன்னகை வேலி

  • 22

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தோட்டாக்களின் சத்தத்தில்
தொலைந்து போனது
என் புன்னகை தேசம்
தேடுகிறேன் இணையத்தில் இன்று

உதடுகள் எல்லாமே ஊமையாகி விட்டது
உதிரம் எல்லாம் உறைந்து விட்டது
கண்ணீர் எல்லாம் வற்றி விட்டது
சொந்தம் இன்றி அநாதையாகி விட்டேன்

பூங்காவனம் என்று என் தாய்ப்பூமியை நம்பியதிற்கு
தலைத்தெறிக்க சிதற ஓடக் கண்டேன்
இதுதானா என் தேசம் என்று
உள்ளுக்குள் பேசிக்கொள்கிறேன்
யாரோ தவற விட்ட பித்தளை பாத்திரத்தோடு இன்று

முள்வேலிக்குள் கைதியாய் நான்
இதுதான் என் அரண்மனையோ
என் தேசத்தின் பரிசளிப்போ
ஏக்கத்தோடு ஊற்று பார்க்கிறேன்
புதியாய் போடப்பட்ட முள்வேலியை

சிறுபான்மையின் குருதியில் உதித்தவன்
என்பதால் என்னவோ
சிதறிய கண்ணாடித்துண்டுகளை
நெஞ்சிலே கீறி கிழித்து பார்க்கிறேன்
உதிரம் கொடுத்து உறவுகளை மீட்க

என் தேசத்தின் விடியலுக்காய்
என் சிறுபான்மையின் வேலிக்குள்
புன்னகை பூக்கள் மலராதா
என்ற வேட்கையோடு
தனிமையில் கடற்கரையின்
ஓரத்தில் நான்

அனுகவி றிப்கான்.
அட்டாளைச்சேனை-06

தோட்டாக்களின் சத்தத்தில் தொலைந்து போனது என் புன்னகை தேசம் தேடுகிறேன் இணையத்தில் இன்று உதடுகள் எல்லாமே ஊமையாகி விட்டது உதிரம் எல்லாம் உறைந்து விட்டது கண்ணீர் எல்லாம் வற்றி விட்டது சொந்தம் இன்றி அநாதையாகி…

தோட்டாக்களின் சத்தத்தில் தொலைந்து போனது என் புன்னகை தேசம் தேடுகிறேன் இணையத்தில் இன்று உதடுகள் எல்லாமே ஊமையாகி விட்டது உதிரம் எல்லாம் உறைந்து விட்டது கண்ணீர் எல்லாம் வற்றி விட்டது சொந்தம் இன்றி அநாதையாகி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *