மதீனாவில் வாழும் கோன்.
- by admin
- 23
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
சித்திரை மாத முழுநிலவாக
பத்தரைமாற்றுச் சுடரொளியாக
இத்தரை மீதில் திருஉருவாக
முத்திரை பதித்தார் இறுதி நபியாக
குப்பைகளை தன்மீது போடும் மாது
ஒரு நாளில் அப்பக்கம் வராத போது
நலமில்லை அவளுக்கென்று அறிந்த போது
பார்பதற்கு சென்ற நபிக்கு நிகரேது
சுமைகளைச் சுமந்தபடி மூதாட்டி
நபி சென்றார் உதவுதற்கு வழிகாட்டி
பயணம் முழுதும் அவள் நபியைத் திட்டி
கேட்டிருந்தார் நபியோ கைகட்டி
பலி வாங்க சந்தர்ப்பம் கிடைத்த போதும்
இழிசெயல் முஃமின் நமக்கு வேண்டாம் என்றார்
குழி தோண்டிப் புதைத்திட்டார் அறியாமையை
வழிகாட்டியாய் வந்தார் அறிவுப்பாதையில்
கொலைவாளை ஒரு கொடியோன் ஏந்தி வந்தான்
தலையுனதே என் வாளால் வீழுமென்றான்
நிலைகுலையா நபியவரின் ஈமான் கண்டான்
தலைகுனிந்தான் காபிர் அவன் முஸ்லிம் ஆனான்
கற்களின் மீதுதான் அவர் பயணம்
முற்களின் மீதுதான் அவர் சயனம்
உள்ளத்தில் உயர்வான மௌனம்
மெல்லத்தான் வளர்த்தார் சமாதானம்
அன்பு நபி எங்களுக்குத் தலைவராவார்
அகிலத்திற்கோர் அருட்கொடையாவார்
மாண்பு நபி காட்டிய பாதை செல்வோம்
மறுமையில் ரசூல் நபியின் சபாஅத் பெறுவோம்
மக்கொனையூராள்
சித்திரை மாத முழுநிலவாக பத்தரைமாற்றுச் சுடரொளியாக இத்தரை மீதில் திருஉருவாக முத்திரை பதித்தார் இறுதி நபியாக குப்பைகளை தன்மீது போடும் மாது ஒரு நாளில் அப்பக்கம் வராத போது நலமில்லை அவளுக்கென்று அறிந்த போது…
சித்திரை மாத முழுநிலவாக பத்தரைமாற்றுச் சுடரொளியாக இத்தரை மீதில் திருஉருவாக முத்திரை பதித்தார் இறுதி நபியாக குப்பைகளை தன்மீது போடும் மாது ஒரு நாளில் அப்பக்கம் வராத போது நலமில்லை அவளுக்கென்று அறிந்த போது…