மனித நேயம் கொண்டு பார்ப்போம்
- by admin
- 17
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
ஒரு வீட்டு வாசலில் சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் வந்து நிற்கின்றார். அவரைப் பார்த்து முகம் சுழித்த மகன் தன் தந்தையை நோக்கி,
“குப்பைக்காரர் வந்திருக்கின்றார்” என்று கூறினான்.
அதற்குத் தந்தை மிக நிதானத்தோடும் உறுதியோடும்,
“இல்லை மகன். நாம்தான் குப்பைக்குச் சொந்தமானவர்கள்; அசுத்தமாக்குபவர்கள். அவரோ சுத்தம் செய்பவர். எமக்கு உதவுவதற்காக வருகை தந்துள்ளார்” என்று கூறினார்.
எவ்வளவு அழகான, ஆழமான, பண்பாடும் ஒழுக்கமும் உள்ள பிள்ளை வளர்ப்பு.
எந்தவொரு மனிதனும், தன்னுடைய நிறம், குடும்பம், பிறப்பிடம், உடல்வாகு, ஆண், பெண் போன்ற எதையும் தீர்மானிப்பதுமில்லை. தேர்வு செய்வதுமில்லை. அவை அனைத்தும் இறைவனின் ஏற்பாடுகளின் படி நடைபெறுபவை. அவற்றைக் கொண்டு பெருமை பேச முடியாது; பேசவும் கூடாது. பெருமை பேசுபவன் மனித நேயமுள்ளவனாக இருக்க முடியாது.
அப்படியிருந்தும் சிலர் மக்களுடன் மேற்குறிப்பிட்டவற்றை மையமாக வைத்து பெருமையுடனேயே நடந்து கொள்கின்றனர். கடுகடுப்பானவர்களும் உள்ளனர். முறைப்பவர்களும் உள்ளனர். புன்னகையற்ற வறண்டவர்களும் உள்ளனர். ஏளனம் செய்வோரும் உள்ளனர். எடுத்தெறிந்து பேசுவோரும் உள்ளனர். ஏசுவோரும் உள்ளனர். கடும் சொற்களை வீசுவோரும் உள்ளனர்.
இறைவனின் அருளில் பெருமையாக நடக்கின்றனர். இவர்களின் கேவலத்தை என்னவென்று சொல்ல. சுபாவம் என்று மட்டும் சொல்லாமல் அதனை மாற்ற முயற்சிப்போம்.
பிறரை மனித நேயக் கண்கொண்டு பார்ப்போம். அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வோம். வெறும் பட்டம் பதவிகள் எம் நடத்தையைத் தீர்மானித்து விடக்கூடாது. ஹலாலான தொழில்கள் அனைத்தும் உயர்ந்தவை; உன்னதமானவை. அப்படியான தொழில் செய்வோரை மதிக்கா விட்டாலும் மிதிக்காமல் வாழ்வோம்.
பாஹிர் சுபைர்
ஒரு வீட்டு வாசலில் சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் வந்து நிற்கின்றார். அவரைப் பார்த்து முகம் சுழித்த மகன் தன் தந்தையை நோக்கி, “குப்பைக்காரர் வந்திருக்கின்றார்” என்று கூறினான். அதற்குத் தந்தை மிக நிதானத்தோடும்…
ஒரு வீட்டு வாசலில் சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் வந்து நிற்கின்றார். அவரைப் பார்த்து முகம் சுழித்த மகன் தன் தந்தையை நோக்கி, “குப்பைக்காரர் வந்திருக்கின்றார்” என்று கூறினான். அதற்குத் தந்தை மிக நிதானத்தோடும்…