மனித மாற்றத்தின் மூலம் ஏக்கங்கள் நீப்போம்
- by admin
- 10
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
அடங்காப் பசியும்
ஆறாத் துயரும்
தீரும் காலம் – வராதா?? என
தினம் தினம் ஏங்கி
மாற்றங்களுக்காய்
காத்திருக்கும் உள்ளங்கள் – பல
இப் பூவுலகில் வாழ்கிறதை
அறியாமல்…,
வீணாய் ஊணை
வீசுகிற கைகளும்,
அற்பம் எனத் தெரிந்தும்
பாழாய்ப் போன பருவக் காதலை
தீராத் துயரமாய் எண்ணி
பொன்னான நேரமதையும்,
உலகம் வெள்ளும்
ஆயுதமாம்
சிந்தனையதனையும்
வீணடிக்கும் வீணான
உள்ளங்களும் வாழத்தான்
செய்கின்றன…
கற்பனைகளுக்காய்
உலகை மாற்றுவதை விடுத்து,
மாற்றங்களுக்காய் ஏங்கும்
மக்களின் ஏக்கங்களை
மாற்ற முயற்சியுங்கள்
மனித மாற்றங்களால்…..
SharaBilaal
அடங்காப் பசியும் ஆறாத் துயரும் தீரும் காலம் – வராதா?? என தினம் தினம் ஏங்கி மாற்றங்களுக்காய் காத்திருக்கும் உள்ளங்கள் – பல இப் பூவுலகில் வாழ்கிறதை அறியாமல்…, வீணாய் ஊணை வீசுகிற கைகளும்,…
அடங்காப் பசியும் ஆறாத் துயரும் தீரும் காலம் – வராதா?? என தினம் தினம் ஏங்கி மாற்றங்களுக்காய் காத்திருக்கும் உள்ளங்கள் – பல இப் பூவுலகில் வாழ்கிறதை அறியாமல்…, வீணாய் ஊணை வீசுகிற கைகளும்,…