மழை வருமா?
- by admin
- 65
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
மழை வருமா?
மழை வருமா?
களையாளும் முழைத்திடுமா?
தூசடைந்த நாசிக்குள்
மண்வாசம் நுழைந்திடுமா?
வெப்பமது உலகாள
வியர்வையது உடலாள
வரண்டு போன பூமிநிலை
வானம்தான் நினைத்திடுமா?
முரண்டு பிடிப்பதை
நிறுத்தி விட்டு
நிலத்தினையது நனைத்திடுமா?
தேகமெல்லாம் உஷ்ணத்தில்
வெந்துதான் போகுது.
மழைமேகமெல்லாம்
உலகத்தை
வெறுத்துதான் இருக்குது.
தாகத்தில் உயிர் துடிக்கிது
இதயமும் மடங்காய் அடிக்கிது
மேகத்தின் உயிர் பிச்சையையே
இவ்வுலகெல்லாம் வேண்டி நிக்குது.
முகிற்களின் சிறையிட்குள்
அடைபட்ட மழைத்துளியே!
உயிர்களின் நிலையறிந்து
பூட்டுடைத்து வாவெளியே!
சக்கரையை நாடி வரும்
எறும்புகளின் இனம் போலே
உன் சாதியெல்லாம்
அழைத்து விட்டு
திரும்பிவிடு நீ கீழே!
விவசாய நிலங்களில்
வெடிப்புக்கள் அதிகம்.
இங்கு
விவசாயி மனங்களில்
துடிப்புக்கள் அதிகம்.
பாவம்செய்யும் மனிதக்கு
பாவப்படத் தேவையில்லை நீ!
இறந்து விழும் மரங்களுக்கு
இறக்கப்படு அது போதும்
உன் மனதில் ஈரமிருந்தால்
உண்மையான அன்பிருந்தால்
உலகித்தின் பாரமெல்லாம்
உன்னீரம் கொண்டு கரைத்திட
இறைவனை கேட்டு விட்டு
இப்போதே வந்திடு!
இம்சைதரும் வறட்சியை
இந்நொடியே துறத்திடு!
Rustha Salam
மழை வருமா? மழை வருமா? களையாளும் முழைத்திடுமா? தூசடைந்த நாசிக்குள் மண்வாசம் நுழைந்திடுமா? வெப்பமது உலகாள வியர்வையது உடலாள வரண்டு போன பூமிநிலை வானம்தான் நினைத்திடுமா? முரண்டு பிடிப்பதை நிறுத்தி விட்டு நிலத்தினையது நனைத்திடுமா?…
மழை வருமா? மழை வருமா? களையாளும் முழைத்திடுமா? தூசடைந்த நாசிக்குள் மண்வாசம் நுழைந்திடுமா? வெப்பமது உலகாள வியர்வையது உடலாள வரண்டு போன பூமிநிலை வானம்தான் நினைத்திடுமா? முரண்டு பிடிப்பதை நிறுத்தி விட்டு நிலத்தினையது நனைத்திடுமா?…