மாறிப்போனன் உன் வருகை கண்டு
- by admin
- 15
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
பிறை கண்டு நோற்ற நீயே
மெது மெதுவாய்
என்னைக் கடந்து செல்கின்றாய்
தூக்கம் கொண்டேன்
காலைச் சூரியன் என் நெற்றி சுட
மாறிப்போனேன்
இவை மறந்து போனேன்
ரமழானே உன் வருகை கண்டு
கூடும் குறையும் ஈமான்
நீ என்னோடு இருக்கையில்
கூடியது மட்டுமே
இருள் சூழ அடி வானில் அவன்
அடியாரைத் தேட
துள்ளி எழும்பி தஹஜத் தொழுதேன்
கண்ணீர்க் கடல் வற்றவில்லையே
அருளாளன் நினைவில் இருக்கயில்
தேம்பித் தேம்பி அழுதேன்
முன் செய்த அறிந்த
அறியா பாவக் கறை நீங்க
பரகத்தான ஸஹர் உணவு
முழுமையாய் பெற்றிட
மனமும் குளிர்ந்ததுவே
நிய்யதை வைத்திட
சுபஹும் நெருங்கிட
இங்கிதமாய் ரஹ்மானோடு
நெற்றி முத்தமிட்டு பேசுகையில்
மறந்து போனேன் என் இன்னல்களை
இரு கரம் ஏந்தி இறுதியாய்
கேட்டு முடித்தேன்
“இறைவா! என் ஈமான்
தடம் மாறாமல்
உன் வான் மணக்க
ஒரு மரணம் சுவர்க்கத்துகாய்
வேண்டுமென்று”
நிந்தவூர் றிசாமா
SEUSL
பிறை கண்டு நோற்ற நீயே மெது மெதுவாய் என்னைக் கடந்து செல்கின்றாய் தூக்கம் கொண்டேன் காலைச் சூரியன் என் நெற்றி சுட மாறிப்போனேன் இவை மறந்து போனேன் ரமழானே உன் வருகை கண்டு கூடும்…
பிறை கண்டு நோற்ற நீயே மெது மெதுவாய் என்னைக் கடந்து செல்கின்றாய் தூக்கம் கொண்டேன் காலைச் சூரியன் என் நெற்றி சுட மாறிப்போனேன் இவை மறந்து போனேன் ரமழானே உன் வருகை கண்டு கூடும்…