Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
யாவும் ஆறுதல் 

யாவும் ஆறுதல்

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மனதின் துயர் துடைக்க
அன்பெனும் மருந்து போடும்
உண்மை உறவுகள் தானே
வாழ்வின் ஆறுதல்

மென்மையின் குணமாய்
பிறக்கும் பெண்களுக்கு
தந்தை தரும் தைரியமே
அன்பின் ஆறுதல்

உரிமையின் குரல் இன்றி
தடுமாறும் பாட்டாளிக்கு
முதலாளி தரும் போனஸ்
வறுமையின் ஆறுதல்

முதுமை வாட்டிடும் நிழலில்
குழந்தையான பெற்றோருக்கோ
அன்பு காட்டும் பிள்ளைகள் தம்
அரவணைப்பே ஆறுதல்

அயராத காயமாய்
புரியாத சோகமாய்
மாறிய காதலுக்கும்
நம்பிக்கையே ஆறுதல்

பள்ளி வாழ்வை இழந்து
நட்பின் கரங்கள் சேர
துடிக்கும் உயிர்களுக்கோ
நட்பைக் காணுதல் ஆறுதல்

உலகில் கலக்கமாய்
உணர்விலும் கண்ணீர் தரும்
கொரோனா பரவலுக்கோ
தனிமையில் இணையம் ஆறுதல்.

ஆயிரம் காரணம் பிறக்க
சோகங்கள் கக்கும் கண்ணீர்
பலரினதும் வலி தீர்க்கும்
வேதனையின் ஆறுதல்.

Rafeeul
ANURADHAPURA

மனதின் துயர் துடைக்க அன்பெனும் மருந்து போடும் உண்மை உறவுகள் தானே வாழ்வின் ஆறுதல் மென்மையின் குணமாய் பிறக்கும் பெண்களுக்கு தந்தை தரும் தைரியமே அன்பின் ஆறுதல் உரிமையின் குரல் இன்றி தடுமாறும் பாட்டாளிக்கு…

மனதின் துயர் துடைக்க அன்பெனும் மருந்து போடும் உண்மை உறவுகள் தானே வாழ்வின் ஆறுதல் மென்மையின் குணமாய் பிறக்கும் பெண்களுக்கு தந்தை தரும் தைரியமே அன்பின் ஆறுதல் உரிமையின் குரல் இன்றி தடுமாறும் பாட்டாளிக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *