ரமழான்
- by admin
- 9
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
சுட்டெரிக்கும் சுடர் நாட்களில்
சுவன சுகம் தேட
அருள் மிகு மாதம் – ரமழான்.
பொறுமை எனும் பொக்கிஷத்தை
புதைத்து வைக்காமல்
புன்னகைக்கும் மாதம் – ரமழான்.
கண் கலங்கி காகிதம் நனைய
கஸ்தூரித் திருமறையை
ஓதும் மாதம் – ரமழான்.
உணவில்லா உறவினர்களுக்கு
உரம் கொடுத்து
உதவும் மாதம் – ரமழான்
பத்தென்று எண்ணி
பன்மடங்கு ரஹ்மத்தை
பெற்றெடுக்கும் மதம் – ரமழான்.
உலகமெல்லாம் சிற்றென்று
சிதறிக்கிடக்கும்
உயிர்க்கொல்லிக் காவிய
நம் கரம் ஏந்தி
வழி அனுப்ப சந்தர்ப்பமாய்
இருக்கும் மாதம் – ரமழான்.
பல்லாண்டு பகைமையினை
பழி சுமக்காமல்
பாசத்தோடு கட்டியணைக்க
வைக்கும் மாதம் – ரமழான்.
KLM. Akram
Sammanthurai
SEUSL.
சுட்டெரிக்கும் சுடர் நாட்களில் சுவன சுகம் தேட அருள் மிகு மாதம் – ரமழான். பொறுமை எனும் பொக்கிஷத்தை புதைத்து வைக்காமல் புன்னகைக்கும் மாதம் – ரமழான். கண் கலங்கி காகிதம் நனைய கஸ்தூரித்…
சுட்டெரிக்கும் சுடர் நாட்களில் சுவன சுகம் தேட அருள் மிகு மாதம் – ரமழான். பொறுமை எனும் பொக்கிஷத்தை புதைத்து வைக்காமல் புன்னகைக்கும் மாதம் – ரமழான். கண் கலங்கி காகிதம் நனைய கஸ்தூரித்…