வரையறைகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்
- by admin
- 11
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
அமைதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் செயல்படும் அரசியல் கட்சியின் சட்டத்தை காவல்துறை தடுக்கவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த முடியாது என்று குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
முன்னிலை சோசலிச கட்சியின் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதாகவும், கட்சியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பொலிஸ் துறை அடிக்கடி இடையூறு விளைவிப்பதாகவும் சமீபத்தில் கட்சியினரால் தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே தேர்தல் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது.
முறைப்பாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு அரசியல் கட்சி, அரசியல் நடவடிக்கைகளை அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் நடத்த அரசியலமைப்பு அனுமதிக்கிறது என்றும் தேர்தல் ஆணைக்குழு கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம் அந்த கடித்தில் ஒரு அரசியல் கட்சியால் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு எந்த தடை உத்தரவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அமைதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் செயல்படும் அரசியல் கட்சியின் சட்டத்தை காவல்துறை தடுக்கவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த முடியாது என்று குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. முன்னிலை சோசலிச கட்சியின் செயல்பாட்டாளர்கள்…
அமைதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் செயல்படும் அரசியல் கட்சியின் சட்டத்தை காவல்துறை தடுக்கவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த முடியாது என்று குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. முன்னிலை சோசலிச கட்சியின் செயல்பாட்டாளர்கள்…