வாழ்வின் வலிகள்
- by admin
- 7
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
வாழ்வின்
வலிகள் இயல்பினை
சூழ்ந்து இன்பங்களை
உறிஞ்சிக் குடிக்கையில்
இதயம் தொடும் உறவாய்
இவள் முன்னால்
நீயும் வந்தாய்
இழப்பின் எல்லைகளை
அதீதகமாகப் பார்த்து இனியெதுவும்
இல்லையென்ற நிலையில்
அழைப்போடு நீயும் வந்து
அல்லல் பலதை குறைத்தாய்
கத்தியான கலியுகத்தைக் கடக்க
புத்தியென்பதில்
புதுமைகளை நிறைத்தாய்
பொறுமையின் எல்லையைக்
காட்டி நின்றாய்
வெறுமையின் வெளிகளை
போற்றி வென்றாய்
கர்வத்தில் கூட உன்னில்
கடுஞ்சொல் நான் கண்டதில்லை
தனிமைத் தீயில் என்னை நீ
தவிக்க விட்டதுமில்லை
நாம் நட்புக் கொண்டு
வாரங்கள் தாண்டி
மாதங்களை கடக்கையில்
மனதிற்குள்ளே ஓர் எண்ணம்
உன்னை வருடங்கள் தாழ்த்தி
சந்திக்காவிடின் வலிகளெனக்கு
சொந்தமாயிருக்காது
படைத்தவன் நாட்டம் தான்
நீயென்னை பாதியிலே
சந்திக்க வேண்டுமென்பது
பரவாயில்லை
இப்படியே இருப்போம்
மீதமுள்ள காலம் வரை ….
ஸாஹிரா பானு
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்
வாழ்வின் வலிகள் இயல்பினை சூழ்ந்து இன்பங்களை உறிஞ்சிக் குடிக்கையில் இதயம் தொடும் உறவாய் இவள் முன்னால் நீயும் வந்தாய் இழப்பின் எல்லைகளை அதீதகமாகப் பார்த்து இனியெதுவும் இல்லையென்ற நிலையில் அழைப்போடு நீயும் வந்து அல்லல்…
வாழ்வின் வலிகள் இயல்பினை சூழ்ந்து இன்பங்களை உறிஞ்சிக் குடிக்கையில் இதயம் தொடும் உறவாய் இவள் முன்னால் நீயும் வந்தாய் இழப்பின் எல்லைகளை அதீதகமாகப் பார்த்து இனியெதுவும் இல்லையென்ற நிலையில் அழைப்போடு நீயும் வந்து அல்லல்…