Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
’வெள்ளி, திங்கட்கிழமைகளில் தேர்தல் வேண்டாம்’..!! திடீரென கோரிக்கை வைத்த தமிழிசை..!! இப்படி ஒரு காரணமா..? 

’வெள்ளி, திங்கட்கிழமைகளில் தேர்தல் வேண்டாம்’..!! திடீரென கோரிக்கை வைத்த தமிழிசை..!! இப்படி ஒரு காரணமா..?

  • 4

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

”வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் தேர்தல் வைத்தால் தொடர் விடுப்பு எடுத்துக் கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வருவதில்லை” என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களின் பெயர்கள் கொத்து கொத்தாக நீக்கப்பட்டு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இன்று காலை தென் சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தென் சென்னை தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள வாக்கு செலுத்துவதற்கு முயற்சி செய்தனர். இருப்பினும் பாஜகவினர் இது தொடர்பாக போலீசிடம் தகவல் அளித்து அதனை முறியடித்து இருக்கிறோம். தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும் கொத்துக்கொத்தாக வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து பேசிய அவர், ”வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் தேர்தல் நடத்தினால் பிந்தைய மற்றும் முந்தைய நாட்களில் தொடர் விடுப்பு எடுத்துக் கொண்டு மக்கள் வாக்களிக்க வருவதில்லை. எனவே, தேர்தலை புதன், வியாழன் போன்ற நாட்களில் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு 100% வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், அதற்கு பதிலாக வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்களிக்க வருபவர்களுக்கு பெயர் இல்லை என்றால் அவர்கள் எப்படி வாக்களிக்க முடியும்? மேலும், சேலஞ்ச் ஓட்டு, டெண்டர் ஓட்டு போன்றவை குறித்து போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. அதையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

Read More : மக்களே செம குட் நியூஸ்..!! இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு..!! வெளுத்து வாங்கும் மழை..!!

The post ’வெள்ளி, திங்கட்கிழமைகளில் தேர்தல் வேண்டாம்’..!! திடீரென கோரிக்கை வைத்த தமிழிசை..!! இப்படி ஒரு காரணமா..? appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” ”வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் தேர்தல் வைத்தால் தொடர் விடுப்பு எடுத்துக் கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வருவதில்லை” என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு…

[[{“value”:” ”வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் தேர்தல் வைத்தால் தொடர் விடுப்பு எடுத்துக் கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வருவதில்லை” என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *