காத்திருப்பு
௧டல் கடந்து நீ சென்றாலும்
கரையாமல் பதிந்து நிற்கிறது
உன் நினைவுகள்.
கண்ணீர் துடைக்க
கண்ணெதிரே நீ இல்லை!
என்னிடமே நான் இல்லை!
கண்முன்னே நீ வருவாயா
கன்னியிவள் கவலை
தீர்க்கும் எண்ணம் கொண்டு?
கண்களிலே என்னை
கைது செய்து விடு.
கைவன்னம் என்னிடம்
உயிர் மட்டுமே
மிச்சமாய் இருக்கிறது!
Fathima Badhusha Hussain Deen Faculty of Islamic Studies and Arabic Language South Eastern University of Sri Lanka