புன்னகையை எரித்த தேசம்

  • 19

பூவே! நீ வென்று விட்டாய்
அதனால்தான் இப்பூமியில்
கால் வைக்குமுன்னே
சென்று விட்டாய்.

உன் தங்கப் பூவிதழில்
முத்தமழை பொழிந்திட முடியாமல்
உனைப் பெத்த மனம் அழுகிறதே
எரிமலையாய்க் கொதிக்கிறதே

உனக்கு வலித்திடுமோ என்று
அள்ளிக் கொஞ்சவும் அஞ்சிய
தந்தை மனம் இன்று தவியாய்த் தவிக்கிறதே இரத்தக்கண்ணீர் வடிக்கிறதே

மனிதம் மரணித்த தேசத்தில்
வாழ வேண்டிமென்று
வானுலகம் சென்றாயோ
சின்னச்சிட்டு நீயும்
சுவனத்து வாசல் எங்கும்
சுற்றி மகிழ்ந்து விடு
சுவனத்துச் சுகமெல்லாம் சுவைத்து விடு

பாசமிகு பெற்றோர்க்கு படைத்தோன் அல்லாஹ்விடம் நேசக்கரம் நீட்டிவிடு
உன்னுன் சுவனத்தில் வாசம் செய்யும்
நற்பாக்கியம் கேட்டுவிடு

பூவே! உன் கருகிய சாம்பலும்
சாபமாக வீசட்டும்
எங்கள் துஆக்கள் எல்லாம்
அல்லாஹ்விடம் பேசட்டும்

உன் புன்னகை தொலைத்த இந்த தேசம்
இனி உனைக் காணப்போவதில்லை
நீ நிம்மதியாக கண்ணுறங்கு
சுவனத்து சோலையிலே
உன் பெற்றோர்க்கு அல்லாஹ்
மேலான பொறுமையை கொடுத்துவிடட்டும்

மக்கொனையூராள்

பூவே! நீ வென்று விட்டாய் அதனால்தான் இப்பூமியில் கால் வைக்குமுன்னே சென்று விட்டாய். உன் தங்கப் பூவிதழில் முத்தமழை பொழிந்திட முடியாமல் உனைப் பெத்த மனம் அழுகிறதே எரிமலையாய்க் கொதிக்கிறதே உனக்கு வலித்திடுமோ என்று…

பூவே! நீ வென்று விட்டாய் அதனால்தான் இப்பூமியில் கால் வைக்குமுன்னே சென்று விட்டாய். உன் தங்கப் பூவிதழில் முத்தமழை பொழிந்திட முடியாமல் உனைப் பெத்த மனம் அழுகிறதே எரிமலையாய்க் கொதிக்கிறதே உனக்கு வலித்திடுமோ என்று…

One thought on “புன்னகையை எரித்த தேசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *