நான் 10% அல்லது 90% லா? – பெண் ஊடகவியாளரின் கேள்வியால் திண்டாடிய ரவிக்குமார்

  • 15

முஸ்லிம்  பெண்களில் 90 சதவீதமானவர்கள் அபாயாவை அணிந்து கொண்டு போதைப் பொருட்களை கடத்துகிறார்கள். அதே போல் அபாயாவை அணிந்து கொண்டு 90 வீதமான முஸ்லிம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் 10 வீதமான முஸ்லிம்கள் தான் நேர்மையான முஸ்லிம்கள்.

05 வேலை அல்லாஹ்வை தொழுது கொண்டு இவர்கள் பாவம் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அபாயாவை அணிந்து கொண்டிருப்பது போதைப் பொருள் கடத்தவும், விபச்சாரத்திற்காகவும் தான்.  என புதிய ஜனநாயக மக்கள் முன்னனி தலைவர் ரவிக்குமார் என்பவர் பேசிய பேச்சு மக்கள் மத்தியில் பெரும் சர்சையை உண்டாக்கியிருந்தது.

இந்நிலையில் SHORTNEWS இன் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவிக்குமாரிடம் முஸ்லிம் பெண்களை அவதூராக பேசி நீங்கள் வெளியிட்ட வீடியோவுக்கு ஆதாரம் இருக்கிறதா? என கேட்க்கப்பட்ட போது ஆதாரம் காட்ட முடியாமல் அவர் திண்டாடியதுடன், ஆதாரம் கேட்ப்பதை நிறுத்தி அடுத்த கேள்விக்கு செல்லாவிட்டால் தான் நிகழ்ச்சியிலிருந்து எழும்பி சென்று விடுவதாகவும் கூறினார்.

நீங்கள் பகிரங்கமாக ஊடகங்களுக்கு முன்னால் பேசிய விடயத்திற்கு ஊடகத்திற்கு முன்னால் ஆதாரம் காட்டுங்கள் என பல முறை கேட்டும் கடைசி வரை அவரால் ஆதாரம் காட்ட முடியாமல் போனது என்பதுடன், சாரி அணிந்து கொண்டு செல்லும் பெண்களில் அதிகமானவர்கள் தவறாகத் தான் நடக்கிறார்கள் என ஒருவர் கூறினால் அதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? என கேட்ட போது அப்படியிருந்தால் நான் ஏற்றுக் கொள்வேன் என அவர் கூறியதும் குறிப்பிடத் தக்கதாகும்.

முஸ்லிம்  பெண்களில் 90 சதவீதமானவர்கள் அபாயாவை அணிந்து கொண்டு போதைப் பொருட்களை கடத்துகிறார்கள். அதே போல் அபாயாவை அணிந்து கொண்டு 90 வீதமான முஸ்லிம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் 10…

முஸ்லிம்  பெண்களில் 90 சதவீதமானவர்கள் அபாயாவை அணிந்து கொண்டு போதைப் பொருட்களை கடத்துகிறார்கள். அதே போல் அபாயாவை அணிந்து கொண்டு 90 வீதமான முஸ்லிம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் 10…